கனியாத காதல் கைகூடுமா ---இல்லை
கானல் நீரான கதையாகுமா
இனிதாக மணவாழ்வு உறவாகுமா ----இல்லை
ஏக்கமே வாழ்வினில் வரவாகுமா
கணை விட்டுப் பாயுதே அம்பு ---அடி
கண்ணாட்டி உன்னோடு எந்நாளும் வம்பு
வீணாகப் போகுதே காலம் ----இந்த
விவரம் அறிந்தால் வரும் நல்லகாலம்
உறவுக்கு கையேந்தி நின்றேன் ----உன்னை
உளமாற தினம் பூசை செய்தேன்
பிரிவென்ற வரம்தர வேண்டாம் ---இந்த
பித்தனை எந்நாளும் மறந்திட வேண்டாம்
வாழ்ந்திடக் கனவுகள் கண்டேன் ----உன்
வாலிபத்தை வாரியள்ளி உண்பேன்
சூழ்ந்திடும் நிலையென்று மாறும் ----என்
சுந்தரி அமைதி உன்னாலே சேரும்
உள்ளதை வெளியில் சொன்னேன் ---உன்
உள்ளத்தில் இடம் தேடி வந்தேன்
இல்லையென் சொல்லாதே பெண்னே ----நான்
இருப்பது உன்னாலே அல்லவோ அன்பே
கானல் நீரான கதையாகுமா
இனிதாக மணவாழ்வு உறவாகுமா ----இல்லை
ஏக்கமே வாழ்வினில் வரவாகுமா
கணை விட்டுப் பாயுதே அம்பு ---அடி
கண்ணாட்டி உன்னோடு எந்நாளும் வம்பு
வீணாகப் போகுதே காலம் ----இந்த
விவரம் அறிந்தால் வரும் நல்லகாலம்
உறவுக்கு கையேந்தி நின்றேன் ----உன்னை
உளமாற தினம் பூசை செய்தேன்
பிரிவென்ற வரம்தர வேண்டாம் ---இந்த
பித்தனை எந்நாளும் மறந்திட வேண்டாம்
வாழ்ந்திடக் கனவுகள் கண்டேன் ----உன்
வாலிபத்தை வாரியள்ளி உண்பேன்
சூழ்ந்திடும் நிலையென்று மாறும் ----என்
சுந்தரி அமைதி உன்னாலே சேரும்
உள்ளதை வெளியில் சொன்னேன் ---உன்
உள்ளத்தில் இடம் தேடி வந்தேன்
இல்லையென் சொல்லாதே பெண்னே ----நான்
இருப்பது உன்னாலே அல்லவோ அன்பே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக