திங்கள், 24 ஆகஸ்ட், 2020

கண்ணே 8 2 4

கனியாத         காதல்       கைகூடுமா    ---இல்லை
கானல்          நீரான        கதையாகுமா
இனிதாக      மணவாழ்வு      உறவாகுமா     ----இல்லை
ஏக்கமே         வாழ்வினில்      வரவாகுமா

கணை விட்டுப்        பாயுதே       அம்பு     ---அடி
கண்ணாட்டி  உன்னோடு   எந்நாளும்    வம்பு
வீணாகப்        போகுதே       காலம்    ----இந்த
விவரம்      அறிந்தால்     வரும்  நல்லகாலம்

உறவுக்கு      கையேந்தி      நின்றேன்    ----உன்னை
உளமாற      தினம்    பூசை  செய்தேன்
பிரிவென்ற     வரம்தர      வேண்டாம்    ---இந்த
பித்தனை    எந்நாளும்     மறந்திட  வேண்டாம்

வாழ்ந்திடக்      கனவுகள்        கண்டேன்    ----உன்
வாலிபத்தை    வாரியள்ளி       உண்பேன்
சூழ்ந்திடும்       நிலையென்று    மாறும்     ----என்
சுந்தரி         அமைதி     உன்னாலே    சேரும்

உள்ளதை       வெளியில்     சொன்னேன்    ---உன்
உள்ளத்தில்    இடம் தேடி     வந்தேன்   
இல்லையென்      சொல்லாதே    பெண்னே    ----நான்
இருப்பது      உன்னாலே  அல்லவோ     அன்பே 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக