திங்கள், 24 ஆகஸ்ட், 2020

கீதங்கள் 822

கண்ணில்     வந்தாய்    கண்மணி   ---உன்
கனிஇதழ்       என்றும்     மாங்கனி
என்னில்   மலர்ந்த     பூங்கொடி  ---நான்
என்றும்     உந்தன்     கைப்பிடி

பொன்னில்    விளைந்த      பூவையே   ---உன்
பூவுடல்        எனக்கு       தேவையே
கண்கள்      சொல்வது      காவியம்    ---நீ
கம்பன்        வரைந்த        ஓவியம்

நின்றால்       நடந்தால்      நிலவடி    ----நான்
நித்தம்       தொழுவேன்     திருவடி
ஒன்றாய்       சேர்ந்திடக்     கூடுமோ    ----உன்
மனம்       அதனை யும்       நாடுமோ

இரவு     முழுவதும்       ஏக்கம்      ----அடியே
எங்கேயோ      போனது      தூக்கம்
உறவு       என்பதில்     நாட்டம்   ---நீ
உதறினால்     எடுப்பேன்      ஓட்டம்

வாட்டம்      போக்கிட      வந்திடு    ----உனது
வற்றாத        அன்பினை     தந்திடு
தோட்டம்      துறவினில்      ஆடலாம்    ----நாம்
சுகமாய்       கானம்       பாடலாம் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக