கண்ணில் வந்தாய் கண்மணி ---உன்
கனிஇதழ் என்றும் மாங்கனி
என்னில் மலர்ந்த பூங்கொடி ---நான்
என்றும் உந்தன் கைப்பிடி
பொன்னில் விளைந்த பூவையே ---உன்
பூவுடல் எனக்கு தேவையே
கண்கள் சொல்வது காவியம் ---நீ
கம்பன் வரைந்த ஓவியம்
நின்றால் நடந்தால் நிலவடி ----நான்
நித்தம் தொழுவேன் திருவடி
ஒன்றாய் சேர்ந்திடக் கூடுமோ ----உன்
மனம் அதனை யும் நாடுமோ
இரவு முழுவதும் ஏக்கம் ----அடியே
எங்கேயோ போனது தூக்கம்
உறவு என்பதில் நாட்டம் ---நீ
உதறினால் எடுப்பேன் ஓட்டம்
வாட்டம் போக்கிட வந்திடு ----உனது
வற்றாத அன்பினை தந்திடு
தோட்டம் துறவினில் ஆடலாம் ----நாம்
சுகமாய் கானம் பாடலாம்
கனிஇதழ் என்றும் மாங்கனி
என்னில் மலர்ந்த பூங்கொடி ---நான்
என்றும் உந்தன் கைப்பிடி
பொன்னில் விளைந்த பூவையே ---உன்
பூவுடல் எனக்கு தேவையே
கண்கள் சொல்வது காவியம் ---நீ
கம்பன் வரைந்த ஓவியம்
நின்றால் நடந்தால் நிலவடி ----நான்
நித்தம் தொழுவேன் திருவடி
ஒன்றாய் சேர்ந்திடக் கூடுமோ ----உன்
மனம் அதனை யும் நாடுமோ
இரவு முழுவதும் ஏக்கம் ----அடியே
எங்கேயோ போனது தூக்கம்
உறவு என்பதில் நாட்டம் ---நீ
உதறினால் எடுப்பேன் ஓட்டம்
வாட்டம் போக்கிட வந்திடு ----உனது
வற்றாத அன்பினை தந்திடு
தோட்டம் துறவினில் ஆடலாம் ----நாம்
சுகமாய் கானம் பாடலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக