சனி, 9 மார்ச், 2019

ஆண்டவன் 632

இறைவா      உன்னையே   அழைக்கின்றேன்   ---நீ
இன்னருள்    தருகவென     விழைகின்றேன்
மறவாத       மனமெனக்கு     அருள்வாயா    ---இந்த
மண்ணிலே     வரங்களைப்    பொழிவாயா

அழகாக      வருவாயா     மயில்மீதில்    --உனது
அடியார்கள்    மகிழ்வார்    புவிமீதில்
கலையாவும்     பொங்கிடும்   கனிச்சாறு    ---என்றும்
காண்பவர்      அடையலாம்    பெரும்பேறு

இருமாதர்     புடைசூழ     வரவேண்டுமே    ---உன்
இசைவானப்    புன்னகை     வரமாகுமே
குருவாக    வந்திட்ட   எங்கள்  குணசீலனே    ---உன்னை
கும்பிட      உலகெல்லாம்     மகிழ்வாகுமே

தமிழாக     வாழ்கின்ற      தலைவனல்லவா   ---உம
தாளடி      பணிந்தாலே     சுகமல்லவா
அமிழ்தமாய்     இனிக்கின்ற    அழகேசனே    ---அனுதினம்
நினைந்தார்க்கு      அருள்     ஈசனே

குணமென்னும்      குன்றேறி      நின்றவா    ---கொடும்
போரில்      பகைவர்தமை      வென்றவா
கணமேனும்     கலங்காத    மனம் வேண்டுமே    ---உந்தன்
காலடி ஒன்றுதான்     எனக்கென்றும்    துணையாகுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக