இறைவா உன்னையே அழைக்கின்றேன் ---நீ
இன்னருள் தருகவென விழைகின்றேன்
மறவாத மனமெனக்கு அருள்வாயா ---இந்த
மண்ணிலே வரங்களைப் பொழிவாயா
அழகாக வருவாயா மயில்மீதில் --உனது
அடியார்கள் மகிழ்வார் புவிமீதில்
கலையாவும் பொங்கிடும் கனிச்சாறு ---என்றும்
காண்பவர் அடையலாம் பெரும்பேறு
இருமாதர் புடைசூழ வரவேண்டுமே ---உன்
இசைவானப் புன்னகை வரமாகுமே
குருவாக வந்திட்ட எங்கள் குணசீலனே ---உன்னை
கும்பிட உலகெல்லாம் மகிழ்வாகுமே
தமிழாக வாழ்கின்ற தலைவனல்லவா ---உம
தாளடி பணிந்தாலே சுகமல்லவா
அமிழ்தமாய் இனிக்கின்ற அழகேசனே ---அனுதினம்
நினைந்தார்க்கு அருள் ஈசனே
குணமென்னும் குன்றேறி நின்றவா ---கொடும்
போரில் பகைவர்தமை வென்றவா
கணமேனும் கலங்காத மனம் வேண்டுமே ---உந்தன்
காலடி ஒன்றுதான் எனக்கென்றும் துணையாகுமே
இன்னருள் தருகவென விழைகின்றேன்
மறவாத மனமெனக்கு அருள்வாயா ---இந்த
மண்ணிலே வரங்களைப் பொழிவாயா
அழகாக வருவாயா மயில்மீதில் --உனது
அடியார்கள் மகிழ்வார் புவிமீதில்
கலையாவும் பொங்கிடும் கனிச்சாறு ---என்றும்
காண்பவர் அடையலாம் பெரும்பேறு
இருமாதர் புடைசூழ வரவேண்டுமே ---உன்
இசைவானப் புன்னகை வரமாகுமே
குருவாக வந்திட்ட எங்கள் குணசீலனே ---உன்னை
கும்பிட உலகெல்லாம் மகிழ்வாகுமே
தமிழாக வாழ்கின்ற தலைவனல்லவா ---உம
தாளடி பணிந்தாலே சுகமல்லவா
அமிழ்தமாய் இனிக்கின்ற அழகேசனே ---அனுதினம்
நினைந்தார்க்கு அருள் ஈசனே
குணமென்னும் குன்றேறி நின்றவா ---கொடும்
போரில் பகைவர்தமை வென்றவா
கணமேனும் கலங்காத மனம் வேண்டுமே ---உந்தன்
காலடி ஒன்றுதான் எனக்கென்றும் துணையாகுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக