திங்கள், 25 பிப்ரவரி, 2019

கண்ணா 631

கண்ணா      உந்தனை      நினைவேன்    ---வரும்
கவலைகள்     அனைத்தையும்      மறப்பேன்
எண்ணாமல்      வாழ்வது      இல்லை     ---நான்
உன்னினையடி     தொழுதிடும்     பிள்ளை

கங்கைக்      கரைதனில்      தோட்டம்      ---அங்கு
காதல்      மழையினில்     ஆட்டம்
எங்கிலும்     இளமை     வழியும்   ---இருக்கிற
பொழுதும்     தேனாய்க்    கழியும்

பாஞ்சாலிக்கு     சேலையைக்      கொடுத்தாய்   ---அந்த
பார்த்தனுக்கு    வெற்றியை     யளித்தாய்
அஞ்சேல்    எனும்சொல்      உரைத்தாய்     ---உன்னை
அனுதினம்      பாடிட     எந்தனைப்      படைத்தாய்

எத்தனைப்      பிறவிகள்     எடுப்பேனோ    ---அதில்
இறைவனே     உந்தனை    மறப்பேனோ
சத்தியம்      நிலைத்திட     வந்தவரே     ---எனக்கு
சகலமும்     கற்றிட த்     தந்தவரே

கண்ணன்      என்றிடக்      கவலை இல்லை    ---அவன்
காலடி       வீழ்ந்தவர்      தோற்பதில்லை
மண்ணிலே    மாயங்கள்     செய்பவனாம்   ---நம்
மனங்களில்     மாதவன்     வாழ்பவனாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக