கண்ணா உந்தனை நினைவேன் ---வரும்
கவலைகள் அனைத்தையும் மறப்பேன்
எண்ணாமல் வாழ்வது இல்லை ---நான்
உன்னினையடி தொழுதிடும் பிள்ளை
கங்கைக் கரைதனில் தோட்டம் ---அங்கு
காதல் மழையினில் ஆட்டம்
எங்கிலும் இளமை வழியும் ---இருக்கிற
பொழுதும் தேனாய்க் கழியும்
பாஞ்சாலிக்கு சேலையைக் கொடுத்தாய் ---அந்த
பார்த்தனுக்கு வெற்றியை யளித்தாய்
அஞ்சேல் எனும்சொல் உரைத்தாய் ---உன்னை
அனுதினம் பாடிட எந்தனைப் படைத்தாய்
எத்தனைப் பிறவிகள் எடுப்பேனோ ---அதில்
இறைவனே உந்தனை மறப்பேனோ
சத்தியம் நிலைத்திட வந்தவரே ---எனக்கு
சகலமும் கற்றிட த் தந்தவரே
கண்ணன் என்றிடக் கவலை இல்லை ---அவன்
காலடி வீழ்ந்தவர் தோற்பதில்லை
மண்ணிலே மாயங்கள் செய்பவனாம் ---நம்
மனங்களில் மாதவன் வாழ்பவனாம்
கவலைகள் அனைத்தையும் மறப்பேன்
எண்ணாமல் வாழ்வது இல்லை ---நான்
உன்னினையடி தொழுதிடும் பிள்ளை
கங்கைக் கரைதனில் தோட்டம் ---அங்கு
காதல் மழையினில் ஆட்டம்
எங்கிலும் இளமை வழியும் ---இருக்கிற
பொழுதும் தேனாய்க் கழியும்
பாஞ்சாலிக்கு சேலையைக் கொடுத்தாய் ---அந்த
பார்த்தனுக்கு வெற்றியை யளித்தாய்
அஞ்சேல் எனும்சொல் உரைத்தாய் ---உன்னை
அனுதினம் பாடிட எந்தனைப் படைத்தாய்
எத்தனைப் பிறவிகள் எடுப்பேனோ ---அதில்
இறைவனே உந்தனை மறப்பேனோ
சத்தியம் நிலைத்திட வந்தவரே ---எனக்கு
சகலமும் கற்றிட த் தந்தவரே
கண்ணன் என்றிடக் கவலை இல்லை ---அவன்
காலடி வீழ்ந்தவர் தோற்பதில்லை
மண்ணிலே மாயங்கள் செய்பவனாம் ---நம்
மனங்களில் மாதவன் வாழ்பவனாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக