சனி, 23 மார்ச், 2019

மங்கையர் 636

மங்கையராக    மண்ணில்     பிறப்பதற்கு   ---நல்ல
மாதவம்        செய்திட     வேண்டுமென்று
செந்தமிழ்    புலவரன்று      சொன்னாரே    ---அதனை
சிந்தையில்     கொண்டிட     வேண்டாமா

வந்ததும்     நம்முடன்     வாழ்வதும்   ---என்றும்
வல்லமை    நிறையத்     தருவதும்
மங்கல       மகளிர்      தானல்லவா    --இதனை
மனதில்     கொள்வது   நலமல்லவா

கற்பினை     மனதில்      கொண்டவர்  ---அன்புடன்
காலம்       முழுவதும்      வருபவர்
அற்புத      அழகுகள்     உரியவர்    ---நமக்கு
அன்னையாய்     என்றுமே     காப்பவர்

நீயும்      நானும்    யாராலே   --இங்கு
நிம்மதி     பெறுவது     அவராலே
பேயாய்     அவரை     மதிப்பாயா     --நீ
பித்தனாய்     தெருவினில்     அலைவாயா

ஆணும்       பெண்ணும்     சரிசமமே   --உலகில்
அனைத்துப்     பொருளும்     பொதுஉடமை
வீணில்       மயங்கித்      திரியாதே     ---சொல்லும்
விவரம்       என்றும்     மறவாதே

(மகளிர்    தின ம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக