மங்கையராக மண்ணில் பிறப்பதற்கு ---நல்ல
மாதவம் செய்திட வேண்டுமென்று
செந்தமிழ் புலவரன்று சொன்னாரே ---அதனை
சிந்தையில் கொண்டிட வேண்டாமா
வந்ததும் நம்முடன் வாழ்வதும் ---என்றும்
வல்லமை நிறையத் தருவதும்
மங்கல மகளிர் தானல்லவா --இதனை
மனதில் கொள்வது நலமல்லவா
கற்பினை மனதில் கொண்டவர் ---அன்புடன்
காலம் முழுவதும் வருபவர்
அற்புத அழகுகள் உரியவர் ---நமக்கு
அன்னையாய் என்றுமே காப்பவர்
நீயும் நானும் யாராலே --இங்கு
நிம்மதி பெறுவது அவராலே
பேயாய் அவரை மதிப்பாயா --நீ
பித்தனாய் தெருவினில் அலைவாயா
ஆணும் பெண்ணும் சரிசமமே --உலகில்
அனைத்துப் பொருளும் பொதுஉடமை
வீணில் மயங்கித் திரியாதே ---சொல்லும்
விவரம் என்றும் மறவாதே
(மகளிர் தின ம்)
மாதவம் செய்திட வேண்டுமென்று
செந்தமிழ் புலவரன்று சொன்னாரே ---அதனை
சிந்தையில் கொண்டிட வேண்டாமா
வந்ததும் நம்முடன் வாழ்வதும் ---என்றும்
வல்லமை நிறையத் தருவதும்
மங்கல மகளிர் தானல்லவா --இதனை
மனதில் கொள்வது நலமல்லவா
கற்பினை மனதில் கொண்டவர் ---அன்புடன்
காலம் முழுவதும் வருபவர்
அற்புத அழகுகள் உரியவர் ---நமக்கு
அன்னையாய் என்றுமே காப்பவர்
நீயும் நானும் யாராலே --இங்கு
நிம்மதி பெறுவது அவராலே
பேயாய் அவரை மதிப்பாயா --நீ
பித்தனாய் தெருவினில் அலைவாயா
ஆணும் பெண்ணும் சரிசமமே --உலகில்
அனைத்துப் பொருளும் பொதுஉடமை
வீணில் மயங்கித் திரியாதே ---சொல்லும்
விவரம் என்றும் மறவாதே
(மகளிர் தின ம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக