திங்கள், 11 மார்ச், 2019

கருணை 633

கண்ணில்      தோன்றும்      காட்சிகளில்    ---அன்பு
கண்ணனை      நானும்      நினைப்பேனே
என்னில்     உலவிடும்    உணர்வுகளில்   ---வரும்
இன்பங்கள்     கோடி     என்பேனம்மா

கங்கை     யாற்றின்      நடுவினிலே     ---அவன்
புரிந்த       காதற்கலைகளை     மறப்பேனா
மங்கையர்     உள்ளத்தில்    மாதவனாய்  --வாழும்
மகத்துவம்    என்னென்று    சொல்வேனம்மா

புல்லாங்      குழலிசை      நாதத்திலே    --இந்த
புவனம்     முழுதும்      மயங்குதம்மா
எல்லோர்   மனதிலும்   வாழ்கின்ற    ---நமது
இறைவன்    ஒருவனே    கண்ணனம்மா

வெண்ணெய்     திருடித்தினம்     விளையாடி   --நம்
விழிகளில்      நிறைந்தவன்    நந்தபாலனம்மா
புன்னை  மர க் காடுகளில்    நம்முடன்   ---அன்று
புகுந்து     விளையாடிய     தோழனம்மா

கண்ணன்    இருப்பான்      நம்மனங்களிலே   ---அவன்
கருணைதான்     காக்கும்     உலகினையே
எண்ணியே    அவனைப்    போற்றிடுவோம்    ---நல்ல
இந்தியராக     சிறப்புடன்     வாழ்ந்திடுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக