கண்ணில் தோன்றும் காட்சிகளில் ---அன்பு
கண்ணனை நானும் நினைப்பேனே
என்னில் உலவிடும் உணர்வுகளில் ---வரும்
இன்பங்கள் கோடி என்பேனம்மா
கங்கை யாற்றின் நடுவினிலே ---அவன்
புரிந்த காதற்கலைகளை மறப்பேனா
மங்கையர் உள்ளத்தில் மாதவனாய் --வாழும்
மகத்துவம் என்னென்று சொல்வேனம்மா
புல்லாங் குழலிசை நாதத்திலே --இந்த
புவனம் முழுதும் மயங்குதம்மா
எல்லோர் மனதிலும் வாழ்கின்ற ---நமது
இறைவன் ஒருவனே கண்ணனம்மா
வெண்ணெய் திருடித்தினம் விளையாடி --நம்
விழிகளில் நிறைந்தவன் நந்தபாலனம்மா
புன்னை மர க் காடுகளில் நம்முடன் ---அன்று
புகுந்து விளையாடிய தோழனம்மா
கண்ணன் இருப்பான் நம்மனங்களிலே ---அவன்
கருணைதான் காக்கும் உலகினையே
எண்ணியே அவனைப் போற்றிடுவோம் ---நல்ல
இந்தியராக சிறப்புடன் வாழ்ந்திடுவோம்
கண்ணனை நானும் நினைப்பேனே
என்னில் உலவிடும் உணர்வுகளில் ---வரும்
இன்பங்கள் கோடி என்பேனம்மா
கங்கை யாற்றின் நடுவினிலே ---அவன்
புரிந்த காதற்கலைகளை மறப்பேனா
மங்கையர் உள்ளத்தில் மாதவனாய் --வாழும்
மகத்துவம் என்னென்று சொல்வேனம்மா
புல்லாங் குழலிசை நாதத்திலே --இந்த
புவனம் முழுதும் மயங்குதம்மா
எல்லோர் மனதிலும் வாழ்கின்ற ---நமது
இறைவன் ஒருவனே கண்ணனம்மா
வெண்ணெய் திருடித்தினம் விளையாடி --நம்
விழிகளில் நிறைந்தவன் நந்தபாலனம்மா
புன்னை மர க் காடுகளில் நம்முடன் ---அன்று
புகுந்து விளையாடிய தோழனம்மா
கண்ணன் இருப்பான் நம்மனங்களிலே ---அவன்
கருணைதான் காக்கும் உலகினையே
எண்ணியே அவனைப் போற்றிடுவோம் ---நல்ல
இந்தியராக சிறப்புடன் வாழ்ந்திடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக