ஐயிரண்டு மாசங்கள் சுமந்தாய் ---நான்
அவனியில் பிறந்திட வைத்தாய்
பொய்யறியாது என்னையும் நீ வளர்த்தாய் ---தமிழ்
புலவனாய் என்னையன்ரே அமைத்தாய்
அன்னைவழி நானென்றும் நடந்தேன் ---உந்தன்
அருள்மொழி கேட்டு நானும் வளர்ந்தேன்
என்னாளும் உனையிங்கு மறவேன் ---என்
இதயமே நீயென்று உணர்ந்தேன்
பொன்னாலே செய்து வைத்த உருவம் --நீயோ
பூமியிலே நடமாடும் தெய்வம்
கண்களோ அன்பு மழை பொழியும் --உனது
காலடியில் என்வாழ்வும் பொலியும்
நின்றாலும் நடந்தாலும் அழகு --உன்னை
நினைத்தாலே உருவாகும் சிறப்பு
மன்றாடும் தென்றலும் நீயே --நானோ
மாறாத சிறுபிள்ளை தாயே
மனதிலே கோவிலொன்று அமைப்பேன் --என்
மாதா நீ குடியிருக்க அழைப்பேன்
இனிதான சுகவாழ்வு தருவாய் --என்னோடு
இருந்திட என்னம்மையே வருவாய்
அவனியில் பிறந்திட வைத்தாய்
பொய்யறியாது என்னையும் நீ வளர்த்தாய் ---தமிழ்
புலவனாய் என்னையன்ரே அமைத்தாய்
அன்னைவழி நானென்றும் நடந்தேன் ---உந்தன்
அருள்மொழி கேட்டு நானும் வளர்ந்தேன்
என்னாளும் உனையிங்கு மறவேன் ---என்
இதயமே நீயென்று உணர்ந்தேன்
பொன்னாலே செய்து வைத்த உருவம் --நீயோ
பூமியிலே நடமாடும் தெய்வம்
கண்களோ அன்பு மழை பொழியும் --உனது
காலடியில் என்வாழ்வும் பொலியும்
நின்றாலும் நடந்தாலும் அழகு --உன்னை
நினைத்தாலே உருவாகும் சிறப்பு
மன்றாடும் தென்றலும் நீயே --நானோ
மாறாத சிறுபிள்ளை தாயே
மனதிலே கோவிலொன்று அமைப்பேன் --என்
மாதா நீ குடியிருக்க அழைப்பேன்
இனிதான சுகவாழ்வு தருவாய் --என்னோடு
இருந்திட என்னம்மையே வருவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக