சனி, 16 மார்ச், 2019

என்னம்மா 634

ஐயிரண்டு      மாசங்கள்     சுமந்தாய்     ---நான்
அவனியில்     பிறந்திட     வைத்தாய்
பொய்யறியாது      என்னையும் நீ    வளர்த்தாய்   ---தமிழ்
புலவனாய்   என்னையன்ரே      அமைத்தாய்

அன்னைவழி      நானென்றும்      நடந்தேன்    ---உந்தன்
அருள்மொழி      கேட்டு நானும்    வளர்ந்தேன்
என்னாளும்     உனையிங்கு      மறவேன்    ---என்
இதயமே        நீயென்று      உணர்ந்தேன்

பொன்னாலே      செய்து வைத்த    உருவம்    --நீயோ
பூமியிலே        நடமாடும்       தெய்வம் 
கண்களோ      அன்பு மழை     பொழியும்    --உனது
காலடியில்      என்வாழ்வும்    பொலியும்

நின்றாலும்       நடந்தாலும்     அழகு    --உன்னை
நினைத்தாலே     உருவாகும்    சிறப்பு
மன்றாடும்       தென்றலும்      நீயே    --நானோ
மாறாத        சிறுபிள்ளை      தாயே

மனதிலே   கோவிலொன்று      அமைப்பேன்     --என்
மாதா நீ       குடியிருக்க        அழைப்பேன்
இனிதான       சுகவாழ்வு    தருவாய்    --என்னோடு
இருந்திட       என்னம்மையே     வருவாய்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக