என்னைப் படைத்தவன் நீ தானே ---உனக்கு
என்மேல் ஏனப்பா இரக்கமில்லை
பொன்னினைத் தேடி அலைந்தேனா --அழியாத
புகழினை விரும்பி வாழ்கிறேன்
கண்கள் வடிக்கும் நீர்திவலை --எனக்கு
காலம் முழுவதும் மனக்கவலை
உன்னை நினைத்திட மறந்தேனா --எனோ
உழன்று தவிக்க விடலாமா
நீரும் நிலமும் உள்ளவரை --உன்னை
நினைவில் வைத்து மகிழ்ந்திடுவேன்
பேரும் புகழும் நீ கொடுப்பாய் --என்னையுன்
பேரருள் தன்னில் திளைக்க வைப்பாய்
அன்பால் எந்தனை வளர விட்டாய் --எனக்குள்
ஆறாம் அறிவை நீ கொடுத்தாய்
பண்பால் என்னையே உயரவிட்டாய் ---தமிழில்
பண்டிதனாக்கி கவிதைகள் பாடவிட்டாய்
நன்றி என்பதை நான் மறவேன் --என்
நாயகா உன்னடி தினம் பணிவேன்
என்றும் எங்கிலும் நீ தானே ---உன்னிடம்
இருப்பதை தருவாய் பெம்மானே
என்மேல் ஏனப்பா இரக்கமில்லை
பொன்னினைத் தேடி அலைந்தேனா --அழியாத
புகழினை விரும்பி வாழ்கிறேன்
கண்கள் வடிக்கும் நீர்திவலை --எனக்கு
காலம் முழுவதும் மனக்கவலை
உன்னை நினைத்திட மறந்தேனா --எனோ
உழன்று தவிக்க விடலாமா
நீரும் நிலமும் உள்ளவரை --உன்னை
நினைவில் வைத்து மகிழ்ந்திடுவேன்
பேரும் புகழும் நீ கொடுப்பாய் --என்னையுன்
பேரருள் தன்னில் திளைக்க வைப்பாய்
அன்பால் எந்தனை வளர விட்டாய் --எனக்குள்
ஆறாம் அறிவை நீ கொடுத்தாய்
பண்பால் என்னையே உயரவிட்டாய் ---தமிழில்
பண்டிதனாக்கி கவிதைகள் பாடவிட்டாய்
நன்றி என்பதை நான் மறவேன் --என்
நாயகா உன்னடி தினம் பணிவேன்
என்றும் எங்கிலும் நீ தானே ---உன்னிடம்
இருப்பதை தருவாய் பெம்மானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக