சனி, 23 மார்ச், 2019

பெம்மானே 637

என்னைப்       படைத்தவன்       நீ  தானே   ---உனக்கு
என்மேல்       ஏனப்பா     இரக்கமில்லை
பொன்னினைத்     தேடி      அலைந்தேனா   --அழியாத
புகழினை     விரும்பி       வாழ்கிறேன்

கண்கள்      வடிக்கும்        நீர்திவலை   --எனக்கு
காலம்      முழுவதும்      மனக்கவலை
உன்னை     நினைத்திட    மறந்தேனா   --எனோ
உழன்று      தவிக்க     விடலாமா

நீரும்          நிலமும்     உள்ளவரை    --உன்னை
நினைவில்    வைத்து     மகிழ்ந்திடுவேன்
பேரும்       புகழும்       நீ கொடுப்பாய்    --என்னையுன்
பேரருள்     தன்னில்   திளைக்க  வைப்பாய்

அன்பால்       எந்தனை      வளர விட்டாய்    --எனக்குள்
ஆறாம்     அறிவை     நீ  கொடுத்தாய்
பண்பால்      என்னையே     உயரவிட்டாய்    ---தமிழில்
பண்டிதனாக்கி     கவிதைகள்     பாடவிட்டாய்

நன்றி       என்பதை      நான் மறவேன்    --என்
நாயகா உன்னடி      தினம்   பணிவேன்
என்றும்      எங்கிலும்     நீ  தானே ---உன்னிடம்
இருப்பதை      தருவாய்     பெம்மானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக