சனி, 23 மார்ச், 2019

ஸ்ரீஹரி 638

ஸ்ரீஹரி  நாதா       ஓ      பரந்தாமா    ---தினம்
தேம்பியழும்      மாந்தர்      வாழ
தரிசனம்      தந்திடு   ---எங்கும்
தேனை      அள்ளி     வழங்கிடு

கூறுமடியார்    நன்கு      வாழ்ந்திட   --இங்கு
கொள்ளை     இன்பம்    சேர்த்திடு
ஏறுமயில்     ஏறி     வருவான்   ---உனக்கு
எந்த நாளும்    சொந்த     மருகனே

வெண்ணெய்      திருடித்      தின்றவா    ---அன்று
விண்ணும்      மண்ணும்     அளந்தவா
கண்ணன்     என்னும்     பெயரிலே   ---உலகில்
கால          காலம்       உள்ளவா

அஞ்சலென்ற     சொல்லைத்       தந்த  ---எங்கள்
அழகு வண்ண      மணி      மார்பனே
பஞ்சம்       நீங்கச்      செய்திடு     --வரும்
பகை மை     நீங்க     வைத்திடு

எந்த        நாளும்        மறப்பதில்லை     --எமக்கு
இனிய       நண்பன்       கண்ணனே
புன்னகை      பூக்கும்     மன்னனே    ---இந்த
புவனம்       ஆளும்  தெய்வமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக