வெள்ளி, 8 நவம்பர், 2013

ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் -211.

எனையாளும்  பெருமாளே   நீதானய்யா -உன்னை
 எந்நாளும்  துதிக்கின்ற  உயிர் தானையா
 நினைவோடு   வாழ்கின்ற  இப்பூமியில் -என்றும்
 நினையன்றி  யாருண்டு  எப்போதுமே    (எனையாளும் )

 மலர்களும்   தோட்டத்தில்  மலர்ந்தாடுது -உனது
 மலர்ப்பதம்  வேண்டியன்றோ   விழுந்தோடுது
 கலையாவும்   உன்னிடமே  குடிகொண்டது -நீ
 கதியென்று  வருவார்க்கு  நற்பலன்  கூடுது  (என்னையாளும் )

 சிலையான   கல்கூட  ஜீவன் பெற்றது -நீ
 சிரித்தாலே  முத்துக்கள்  சிறப்பானது
 நிலையாக   நின்றாயே  மலைமீதிலே - உனை
 நெஞ்சார   நினைத்தாலே  சுகமானது   (என்னையாளும் )

 அலைமேவும்  கடல்மீதில்   குடியேறினாய் -உனது
 அடியார்கள்   துயர்நீக்க  விரைவாகினாய்
 பிழையேதும்  செய்தேனோ  பொறுப்பாய்  ஐயா -இனி
 பின்னாளில்  உன்பாதம்   கிடப்பேன்   ஐயா   (என்னையாளும் )

 மதுராவை   அரசாளும்  மகராசனே -எல்லா
 மனங்களை   ஆள்கின்ற   எழில் வாசனே
 வினைதீர்க்க   வந்த     எங்கள் வேங்கடேசனே -நீ
 விரைந்தோடி  வருவாயே  இப்புவி காக்கவே   (எனையாளும் )

வியாழன், 7 நவம்பர், 2013

காதல்மலர் -210.

அலையாடும்  கடல்  மீது  சிறு படகாகினேன் -உன்
 அருள்வெள்ளம்  எனில் பாய்ந்து  தடுமாறினேன்
 கலையாத    மெருகொடும்   எழில்வன்னமே -நினைக்
 கண்டாலும்   எனிலூறும்  புது  வெள்ளமே

 நிலையாக  புதுவாழ்வு  நிதம்  காணலாம் -பிறர்
 நினையாத  செல்வங்கள்  நாம்  சேர்க்கலாம்
 விலைகேட்டு  வந்தோர்கள்  விரைந்து ஓடுவார் -இந்த
 விவரம்  அறிந்தாரோ  தடம்  மாறுவார்

 அழகிற்கே  அழகென்று  பெயர்  பெற்றவள் -நீ
 அமுதூட்டி  நலம்  சேர்க்கும்  விருந்தானவள்
 களைப்பினை  மாற்றும்  நல்ல  மருந்தானவள் -நான்
 கவிபாடத்  தமிழினில்  வெல்லப் பொருளானவள்

 பார்க்கின்ற  மனிதர்க்கு  கடும்பசி  ஊட்டுவாள் -காதல்
 பசியாற  வந்தோர்க்கு  துயர்   கூட்டுவாள்
 போர்க்கருவி  போலாகும்   பொன்மேடையே -இந்தப்
 புவிவெல்ல  நீ காட்டு  உந்தன்  கண்ஜாடையே

 வாழ்நாளும்  உன்கூட  நான்  வரவேண்டுமே -அந்த
 வற்றாத  தேனாறு   நிதம்  வேண்டுமே
 ஒருநாளில்  எனைத்  தேடி  நீயும்   வரலாகுமா -உன்
 இதயத்தில்   என்காதல்   மலர்  பூக்குமா  

புதன், 6 நவம்பர், 2013

சிரஞ்சீவி 209 .

நீரால்  மடிந்தவர்  எத்தனையோ -கள்ள
 நினைவால்  முடிந்தவர்  எத்தனையோ
 போரால்  மறைந்தவர்  எத்தனையோ -பிறர்
 பொருளால்  அழிந்தவர்  எத்தனையோ

 வாளால்  அழிந்தவர்  எத்தனையோ -இங்கு
 வாயால்   கெட்டவர்  எத்தனையோ
 கோளால்   குறைந்தவர்  எத்தனையோ -கெட்ட
 குணத்தால்  இழந்தவர்  எத்தனையோ

 இரவு   என்றுமே  நிலைப்பதில்லை -அந்த
 இயற்கை   நமக்கு   எதிரியில்லை
 உறவுக்காக  நாமும்  கைகொடுத்தால் -இனி
 உலகம்   நம்மிடம்  நெருங்கிவரும்

 களவு   செய்வது  கயமையடா -அதனை
 காண்பவர்   வெறுப்பது  உண்மையடா
 உளவு  சொல்வது   பெருங்கேடு -இதனை
 உணர்ந்து  நடந்திடு  அன்போடு

 கற்றதை  வாழ்வினில்  கடைப்பிடிப்பாய் -வரும்
 காலத்தை   எண்ணியே  முடிவெடுப்பாய்
 அற்புதம்   செய்திட நீ   நினைத்தால் -செல்வம்
 அனைத்தையும்   பிறர்க்கு  தந்துவிடு

 வந்தவர்  போகிற  காலமதில் -அவருடன்
 வருவது   அவர்செய்த  நல்வினையே
 சிந்தனை    வாசலைத்  திறந்துவிடு -இங்கு
 சிரஞ்சீவியாய்  உலகத்தில்   நிலைத்துவிடு 

நம்பிக்கை -208.

நம்பிடு   கைகளை   நம்பிடு -அது
 நம்பிக்கை  என்பதை  வளர்த்துவிடும்
 அம்பிகை  மனது   வைத்திடிலோ -இங்கு
 அனைத்தும்  நலமாய்  முடிந்துவிடும்

 பொன்னில்  ஆசையினைக்  கொள்ளாதே -பிறர்
 புகழ்ச்சியில்  தலைக் கனம்  பொல்லாதே
 பெண்களை   என்றுமே  இகழாதே -அது
 பெருமையை  அழித்திடும்  மறவாதே

 சூதும்   வாதும்  வேதனையே -வரும்
 சுகமும்   ஒருநாள்  சாதனையே
 போதும்  என்ற  மனம்  வேண்டும் -உலகை
 பொறுமையால்   வென்றிடும்  நிலைவேண்டும்

 வாதம்   செய்வதை  விட்டு விடு -நீ
 வானத்தின்  எல்லையைத்  தொட்டுவிடு
 தாயைப்  போற்றிடத்  தயங்காதே -வெறும்
 தாகத்தில்  என்றுமே  மயங்காதே

 இல்லை  என்பது  இல்லையடா --இதனை
 எண்ணியே  முயன்றால்  வெல்லுமடா
 தொல்லைகள்  கோடி  சூழ்ந்திடினும் -நாளும்
 தொடர்ந்து   உழைத்திடில்  வெற்றியடா 

செவ்வாய், 5 நவம்பர், 2013

கந்தவேல் 207

இறைவன்   பெருமை  தன்னையே -வானில் 
 எடுத்து   செல்லும்  பறவையே 
 உறைவிடம்  நோக்கி  செல்கையில் -இந்த 
 உண்மை   அறிதல்  நல்லதே 
 
 வானம்  பொழிந்த  மழையினால் -நம் 
 வயல்கள்  விளைச்சல்  காணுது 
 தானம்   பலரும்  செய்வதால்  -உலகில் 
 தர்மம்   நன்கு   நிலைக்குது 
 
 கரையைத்  தொடும்  அலைகளோ -நமக்கு 
 கடவுள்     கருணை யைச்   சொல்லுது 
 இரையைத்  தேடும்  மிருகமோ -அதன் 
 எதிரில்   வந்தால்   கொல்லுது 
 
 நாளை   இரவு   தேடுது -இங்கு 
 நன்மை   தீமை  உள்ளது 
 சோலை   மலர்கள்   சிரிக்குது -வீணில் 
 சோம்பல்   மனத்தைக்  கெடுக்குது 
 
 உழைக்கும்  வியர்வை  உயர்ந்தது -என்றும் 
 உண்மை   ஒன்றே    வெல்லுது 
 களைப்பவர்க்கு    நீயும்  கைகொடு -உனது 
 கையை  நம்பி  உழைத்திடு 
 
 வந்த  மனிதர்   போகலாம் -ஏன் 
 வாழ்வின்  பாதையும்  மாறலாம் 
 கந்தவேலை  நினைக்கும்  மாந்தரும் -மண்ணில் 
 கவலைகள்   நீங்கியே   வாழலாம் 

திங்கள், 4 நவம்பர், 2013

அழகோவியம் -206 .

மலைமீதில்  வசிக்கின்ற  மாதவா -உன்னை
 மனதார   நினைத்தாலே  வளம்  சேருமே
 அலைபாயும்  கடல்மீது  வாழ்கிறாய் -நினது
 அடியார்கள்  மனவீட்டில்  ஆள்கிறாய்

 நிலையாக  நிற்பது     எழில் கோலமே -தினம்
 நெஞ்சாரத்   துதித்தாலே  சுகமாகுமே
 கலையாவும்  குடிகொண்ட  அழகோவியம் -உன்னை
 கண்டாலே  உருவாகும்  பலகாவியம்

 திருமகள்  உறைமார்பும்  உனதல்லவா -திவ்ய
 திருநாமம்  வெற்றிக்கு  வழியல்லவா
 ஒருநாளும்  மறவாமல்  உனைப் பாடுவோம் -உனது
 ஒப்பற்ற   புகழ் சொல்லி   நாம் ஆடுவோம்

 அவதாரம்  பலதந்த   அருளாளன் நீ -என்றும்
 அடியாரைக்   காக்கின்ற  அமுதமும நீ
 புவனங்கள்    உன்சொல்லுக்  கிசைவாகுமே -இங்கு
 புண்ணியம்  உன்வாசலில்  தவமாகுமே

 காக்கின்ற   உனைத்தேடிக்  கரையேறலாம் -உன்
 கண்பட்டால்  பாவங்கள்  கரைந்தோடலாம்
 பாரதப்  போர்  வென்ற  பரந்தாமனே -உலகில்
 பக்தரைக்   காப்பதுன்  திருநாமமே

 திருமாலே  பெருமாளே  நீ தேனானவன் -மண்ணில்
 திக்கற்ற    பல பேருக்குத்   தாயானவன்
 வரவேண்டும்  புவிமீதில்   திருநாளிலே -எங்கும்
 வழிந்தோடும்  இன்பங்கள்  அப்போதிலே 

சனி, 2 நவம்பர், 2013

பொற்சிலை -205.

உன்னை   நினைக்கையிலே -கண்ணம்மா
 உள்ளம்  கள்ளமாய்ப்  போனதடி
 பொன்னை  உருக்கிய  பொற்சிலையே -அன்பு
 பொங்கிடும்  காதல்  பூந்தளிரே    (உன்னை)

 என்னை மறந்து  நானும்  தவிப்பதென்ன -என்
 இதயத்தில்   பூமழை  பொழிவதென்ன
 எண்ணத்தில்  நிறைந்து  இருப்பதென்ன -நீ
 இன்னமும்  ஏனென்னை  வெருப்பதென்ன

 இரவு  நேரத்தில்   அமைதியில்லை -என்
 இருவிழி  ஏனென்றும்  உறங்கவில்லை
 சிறகு   இழந்த    பறவையென  - நான்
 சித்தம்   கலங்கித்  தவிப்பதென்ன

  வாலை   வயதுக்  குமரியடி -உன்னை
 வாரி  அணைத்திட  ஆசையடி
 நாளை  எண்ணிநீ   தள்ளுவதோ -என்
 நாயகி   நீயென்னைக்  கொல்லுவதோ

 காலம்  வருமெனக்   காத்திருந்தேன் -என்
 கண்மணி  உன்முகம்  பார்த்திருந்தேன்
 வேளை   வருவதும்  தெரியவில்லை -எனக்கு
 விடிவது   எப்படி  புரியவில்லை

 நெஞ்சில்  நினைவு  உள்ளவரை -உன்னை
 நித்தம்  நானும்  நினைத்திருப்பேன்
 கெஞ்சும்  அழுகுரல்  கேட்கலையோ -எனது
 கேள்விக்கு  உன்னிடம்  பதிலிலையோ 

வெள்ளி, 1 நவம்பர், 2013

வேலும் மயிலும் 204.

நேரில்  நடந்ததோ -என்
 நினைவில்  மலர்ந்தது
 நினைவில்  வந்ததோ -நம்
 நெஞ்சில்   வளர்ந்தது

 கூட்டில்  வளர்ந்ததோ -இங்கு
 குடியாய்  பிறந்தது
 ஏட்டில்  உள்ளது -சிலர்க்கு
 எழுத்தாய்  தெரிந்தது

 நாட்டில்  உள்ளவை -மண்ணில்
 நமக்காய்   ஆனது
 பாட்டில்  உள்ளது -நல்ல
 பதமாய்  தோன்றுது

 நீரின்   அடியிலே -நல்ல
 நிலமும்  உள்ளது
 நேசம்  உள்ளதே -பின்பு
 பாசம்   ஆனது

 வாய்மை  வழியிலே -நமது
 வாழ்வும்   அமைவது
 தாய்மை   வழிதான் -உலகில்
 தர்மவழி   ஆனது

 நாளும்  கோளும் -நமக்கு
 நன்மை   தருவது
 வேலும் மயிலுமே -என்றும்
 வெற்றி   தருவது