வெள்ளி, 31 மே, 2013

sollammaa

நிலவை வானம்  வெறுக்குமா நம்
 நேசம் பகையை வெல்லுமா
 உறவு சோகம்  கொடுக்குமா -நீ
 உண்மை  தன்னை சொல்லம்மா

 கண்கள்  காட்சி  மறக்குமா -நல
 கவிதை துன்பம் அளிக்குமா
 பெண்கள் அன்பு  நிலைக்குமா -இந்த
 பெருமை அறிந்து சொல்லம்மா

 மண்ணில்  நீரும் கலக்குமா -இள
 மனதில்  ஆசை வளருமா
 எண்ணில்  எழுத்து  அடங்குமா -உன்
 இதயம் ஈரம்  சுரக்குமா

 காலம்  கடிது  ஓடுமா -வீசும்
 காற்றில் வாசம் தெரியுமா
 நேற்று  நாளை  ஆகுமா -உலக
 நியதி உணர்ந்து  சொல்லம்மா

 கரும்பு கசந்து போகுமா -இங்கே
 காதல்  கனவில் கூடுமா
 இரும்பு இளகி ஓடுமா -எனது
 இனிய தோழி சொல்லம்மா

 கேள்வி பதிலாய்  ஆகுமா -பச்சை
 கிளிகள் பாடம் புரியுமா
 நாடும் நடப்பும் தெரியுமா -எனக்கு
 நல்ல பதிலை கூறம்மா

vadivel murugan

வடிவேல்  முருகன் தன்னை தொழுதேன் -அவன்
 வந்திட வேண்டி தினம் அழைத்தேன்
 பிடி இடை  வள்ளி தெய்வ யானையுடன் -அந்த
 பெருமான் வந்தான் என் கண்ணெதிரில்

 தமிழே முருகன் என உணர்ந்தேன் -தூய
 திருவடி கதி என  நான் கிடந்தேன்
 அமிழ்தே முருகன்  என ருசித்தேன் -ஒலிக்கும்
 ஆலயமணி சொல்வதை நான் கேட்டேன்

 அசுரர்  படை வென்ற அழ்கனவன் -நம்பிய
 அடியவர் துயர்  களையும் அன்பனவன்
மாசு  மருவில்லா  மால் மருகன் -தமிழ்
  மண்ணகம் காத்து நிற்கும் மன்னவன்

 சேவடி  தொழுதிட  காவடி எடுப்பார் -நல்ல
 தினையும்  மாவும் நிதம் படைப்பார்
 பாவலர்  தமிழில்  பாடி வைப்பார் -எங்கும்
 பக்தர்கள்  பால்குடம்  தனை எடுப்பார்

 அலைவாழ் செந்தூர்  பதி  தன்னிலே -தமிழ்
 அழகன்  கொண்டது எழில்கோலம்
 சூரன் செருக்கினை  அழித்த எங்கள் -பால
 சுப்பிரமணிய  சாமியே  உந்தனை பணிவோமே

 உலகில் தமிழ் மொழி உள்ள  வரை -முருகா
 உனது  புகழ் எங்கிலும் நிலைத்திருக்கும்
 நிலவும்  வானும்  நிலைக்கும்  வரை -மனித
 நெஞ்சத்தில்  நீதான் ஆட்சி செய்திடுவாய்

வியாழன், 30 மே, 2013

velan

உள்ளம்  எல்லை மீறுதே -ஏனோ
 உண்மை அன்பை தேடுதே
 கள்ள  மில்லா காதலில்-என்
 கண்கள்  மழை யானதே

 இரவில்  தூக்கம் போனதே -இன்னும்
 இதய ம்  அவனை நாடுதே
 கரை  கடந்த வெள்ளமாய் -அவன்
 காவல்  தேடி  ஓடுதே

 எண்ண   அலைகள் மோதுதே -எனது
 இளமை வேகம் கூடுதே
 அன்னம் வெறுப்பு ஆனதே -கொண்ட
 ஆசை என்னை கொல்லுதே

 தாகம்  கூடி  போனதே -நெஞ்சில்
 தவிப்பு  அதிகம்  ஆனதே
 மோகம்  தரும்  போதையால் -முழு
 நிலவும்  தீயாய்  சுடுதே

 இரவு பகலும்  ஒன்றுதான் -அவனுடன்
இணைந்து  வாழ்தல்  என்றுதான்
 சிறகிழந்த பறவை  போல -நான்
 சிக்கி  தவிப்பதும் உண்மைதான்

 காலம் கொஞ்சம்  போகலாம் -உண்மை
 காதல்  என்றும் வாழலாம்
 வேலன்  கருணை கூடினால் -நான்
 வெற்றி  பெறுவேன் நிச்சயம் 

புதன், 29 மே, 2013

vaanam boomi

நிலவு  வரும் நேரத்திலே
 நினைவு வந்ததா
 நினைவு  வந்த நேரத்திலே
 நிலவு வந்ததா

 கனவு வரும்  நேரத்திலே
 காதல்  வந்ததா
 காதல் வந்த நேரத்திலே
 கனவு  வந்ததா

 உறவு  வரும்  நேரத்திலே
 உணர்வு வந்ததா
 உணர்வு வந்த நேரத்திலே
 உறவு  வந்ததா

 கண்கள் திறந்த நேரம்
 காட்சி  வந்ததா
 காட்சி வந்த நேரத்திலே
 கண்   திறந்ததா

 பெண்  பிறந்த  போதிலே
 பெருமை  வந்ததா
 பெருமை வந்த போதிலே
 பெண்  பிறந்ததா

 வானம் பூமி யாவையும்
 வழங்கி சென்றவர் யாரடா
 வள்ளல் பெருமை  கோடி என்று
 வாழ்த்து  சொல்லடா 

செவ்வாய், 28 மே, 2013

Nimathi

நீரும் ஒரு நாள்  நிலமாகும் அந்த
 நிலமே மீண்டும்  நீராகும்
 மாறும் எண்ணம் வேறாகும் -இந்த
 மண்ணில் எதுதான் நிலையாகும்

 கலையும் கல்லில் சிலையாகும் -அதற்கு
 காலம் தருவது விலையாகும்
 வலை  சிக்கிய மீனாக -சிலர்
 வாழ்வும் தாழ்வும் வசமாகும்
 
 உறவும்  மாறி பகையாகும் -நல்ல
 உண்மையும் வீணே பொய்யாகும்
பேரும் புகழும் ஏதுவாகும் -இங்கு
 பெண்மையே உலகில் சுகமாகும்

 நீயும் நானும் நிஜமாகும் -நல்ல
 நினைவே வாழ்வில்  பலமாகும்
 காயும் நிலவும் கனியாகும் -தாயின்
 கருணை ஒன்றே பெரிதாகும்

 சேயும்  ஒருநாள் தாயாகும் -தூய
 சிந்தனை செயலுக்கு வரமாகும்
 நோய்க்கு மருந்தே சரியாகும் -சிறிய
 நாய்க்கும் நன்றியே குணமாகும்

 உடலுக்கு உணர்வே துணையாகும் -நம்
 உள்ளமே பாயும் கணையாகும்
 நிழலுக்கு மரமே இணையாகும் -நம்
 நெஞ்சுக்கு நீதியே  நிம்மதியாகும்

திங்கள், 27 மே, 2013

Thaai

வானம்  தொழிலை மறந்தது  அதனால்
 வறுமை மண்ணில் வந்த்து
 கானில் பசுமை குறைந்தது -எங்கும்
 காற்றில் மாசு  நிறைந்தது

 நெஞ்சில் கருணை பறந்தது -உலகில்
 நேர்மை  என்பது போனது
 அஞ்சும்  நிலைமை ஆனது -அதற்கு
 யாரை  குறைகள் சொல்வது

 தாயை மறந்து  போனதால் -நம்
 தர்மம்  கற்பனை யானது
 நோயின்  வரவு பெருத்தது -இங்கு
 நுண்கலை செல்வம் அழிந்தது

 இறைவன் என்பதே  மறந்தது -பிறரை
 ஏய்க்கும்  எண்ணம்  வளர்ந்தது
 கரையை கடலும் கடந்தது -இங்கு
 கல்வி சுயநலம்  ஆனது

 பொய்யே புதுமை  ஆனது -நம்
 பூமியில் துயர்கள் மலிந்தது
 பெய்யும் மழையோ பொய்த்தது -ஆனால்
 பெருமாள் கருணையே நிலைத்தது 

வருமோ

நிலவு வருமோ
நெஞ்சம் இனிக்க
உறவு பெறுமோ
 உள்ளம்  இனிக்க

 இரவு வருமோ
 பகலை  முடிக்க
 இதயம் தருமோ
 இவளை  நினைக்க
 
 அருளும் வருமோ
 அன்னை நினைக்க
 அன்பு வருமோ
 அகிலம் சிறக்க
   
 பண்பு  வருமோ
பயணம் சிறக்க
 பாதை வருமோ
 பலரும் நடக்க
 
காதல் வருமோ
 கவிதை படிக்க
 கனவு வருமோ
 கதைகள் வடிக்க

இன்னும் வருமோ
எதையும் எழுத
ஈகை வருமோ
எல்லாம் கொடுக்க

எழுத வருமோ
எனது நினைவை
ஏற்றம் (வருமோ) பெறுமோ
ஏழை வாழ்வு



பாயும் புலி

பெண்னே   உலகம்  என்றார-அதன்
பெருமைகள் பலவும் சொன்னார்
கண்ணே மணியே அழைத்தார் -அவரே
கழுத்தினை அறுத்திட துணிந்தார்

உள்ளவை யாவும் ஒன்று -இதனை
உணர்ந்ந்து நடந்திடில் நன்று
  வயலின் நடுவில் களை போல் -சில
பதர்கள் உலகில் உண்டு

குடித்து போடுவார் கும்மாளம் -அவர்
குடும்பம் பெறுவது அலங்கோலம் -
படித்து இடித்து சொன்னாலும் -அதனை
பற்றி நடப்பவர் யாருமில்லை

 கோவில் தினமும் சென்றிடுவார்-அங்கே
 குடும்ப பெருமைதனை உரைப்பார்
நோயில் வீழ்ந்து முடியுமுன் -தினம்
நூறு பெண்கள் தனை கெடுப்பார்

 தாயின் வயிற்றில் பிறந்தாலும் -இங்கு
தத்துவ நெறிகள் கேட்டாலும்
பாயும் புலி குணமிருக்கும் -அந்த
பாவி மனதில் சூதிருக்கும்

 ஊரை அடித்து உடல் வளர்க்கும் -நல்ல
உறவை பகையாய் மாற்றிவிடும்
 பாறை போன்ற மனமிருக்கும் -முடிவில்
 பஞ்சென காற்றில் பறந்துவிடும்



சனி, 25 மே, 2013

அமேரிக்கா


அதிசியம் பலவும் கண்டேன்
அதனை பாடிட வந்தேன்
காரில் பறக்கும் சாலைகள்
காண அழகிய சோலைகள்

நீரில் நிலத்தில் கோலங்கள்
நினைக்க நினைக்க ஜாலங்கள்
வெள்ளை மனிதர் கூட்டமாய்
வீரைந்து செல்வர் ஓட்டமாய்

கள்ளம் இல்லா பெண்டிரின்
கண்களிலில் அன்பெனும் வெள்ளமே
விண்ணினை தொடும் மாளிகை
விடிய விடிய கேளிக்கை

பண்ணை வீடுகள் பலவகை
பார்த்திட மனதில் உவகைகள்
மலர்கள் கூட்டம் சீரிகுமே
மனதில் ஆசைகள் பறக்குமே

நிலவை மனிதன் ஜெயித்தும்
நினைத்து பார்த்தால் இனிக்குமே
குதித்து ஓடும் அருவிகள்
கும்மாளம் போடும் சிறுவர்கள்

மதித்து பழகும் மனிதர்கள்
மண்ணில் அனைவரும் புனிதரே
இறைவன் கருணையில் வந்தது
என்னிதயம் நன்றியை சொல்லுது

கரையே தெரியா கடலைபோல்
கடவுள் உள்ளமோ பெரியது

Nalam



எதற்கு என்னைப் படைதாய்
என்னை எனக்கு தெரியல்லே
இந்த வாழ்வை எனக்கு
எப்படி கொடுத்தாய் புரியல்லே
புரியல்லே தெரியல்லே புதிரில்லே

தாயின் வயிற்றில் பிறந்தேன் - அந்த
தமிழின் தயவில் வளர்ந்தேன்
பாயும் புலியாய் திரிந்தேன் - உனது
பாத மலர்களில் கலப்பேன்

நிலவில் மனிதன் இறங்கி
நிலத்தை அளந்தான் அன்று
உலகில் மனிதர் எல்லாம்
உயர்ந்ததை பெறுதல் என்று

நீரும் நிலமும் உனது
நினைத்து பார்க்குது மனது
போரில் அமைதி ஏது
பொருமை என்றுமே பெரிது

தெளிந்த மனது வேண்டும்
விரிந்த பார்வை வேண்டும்
அறிந்த விஷயம் சொன்னேன்
அம்மா நீதான் வேண்டும்

கள்ளம் இல்லா உள்ளம் - உனது
கடவுள் வாழும் இல்லம்
பிள்ளைத் தமிழில் நமக்கு
பெரும்புழவர் ஒருவர் சொன்னார்

வெள்ளை போலவே மனது - உலகில்
விரிந்து கிடக்கும் அழகு
கொள்ளை புதையல் அனைத்தும்
கொடுதான் இறைவன் உயிர்க்கு

இதனை நினைத்தவர் உண்டோ
எதிலோ கவனம் கொண்டார்
உதவி செய்ததை நினைத்தால்
உயர்ந்த நிலைகள் வருமே

காதல் கனவு


எழிலார் சோலை - நான்
இருக்கும் மாலை
புயலாய் புகுந்தாள் - ஒரு
பூவை இள மாது

விழிநீர் அருவி - வந்த
விவரம் கருதி
ஏதோ கேட்டேன் - ஆனால்
ஏதும் பதிலில்லை

காலால் கோலம் - இரு
கண்ணில் தாபம்
வேலாய் என் மனதில் - அந்த
விழியாள் நுழைந்தாள்

எண்ணப் பறவை - நான்
எங்கோ பறக்க
கண்ணில் உலகம் - எனக்கு
கடுகாய் தெரியும்

நானும் அவளும் - தினம்
நலமாய் பழக
தேனும் பாலும் - நன்கு
சேர்வது போலானோம்

முவாறு வயது - அவள்
மோகமாய் மனது
பாலாறு ஓட - என்
பாவை இனித்தாள்

கண்ணால் சிரித்தாள் - புது
காதல் படித்தாள்
பொன்னாய் தெரிந்தாள்
புலனில் கலந்தாள்

ஒன்றாய் திரிந்தோம் - இனிய
உறவில் மலர்ந்தோம்
என்றும் இது நிஜமே - என்றே
நான் நினைத்தேன்

நதிநீர் நடுவே - இரவில்
நானும் அவளும்
படகில் பயணம் - மனம்
பாகாய் உருகும்

திரும்பி படுத்தேன் - நான்
திகைப்பால் விழித்தேன்
கரும்பான என்காதல் - கண்ட
கனவென்று எழுந்தேன்


Kalam

நிலவில்   மனிதன்  நடந்தான்  - அவன்
நெஞ்சில்  கனவை  வளர்த்தான்
கடலில் முத்தை எடுத்தான்  - ஏனோ
கருணை  என்பதை  விடுத்தான்

பொன்னை பொருளை  நினைத்தான் - தினம்
போதை தன்னில்  திளைத்தான்
தன்னை  தானே  வளர்த்தான் -  என்றும்
தர்மம் என்பதை தொலைத்தான்

நீரும் நிலமும் சொந்தம் -என்ற
 நினைப்பில் பிறரை வதைத்தான்
ஊரில் பகமை  விதைத்தான்  -இருந்த
உறவை  வீணில் பறித்தான்

இறைவன்   படைத்த  உலகம் -இதில்
எங்கும் தினமும் கலகம் -
குறைகள்  களைதல் நன்று -எனும்
கொள்கை பெறுதல் என்று
 
வாழும் காலம் கொஞ்சம் -நீ
வந்ததில் என்னடா மிஞ்சும்
 பாழும் ஆசை கொடிது -இனி
பார்த்து தெளிந்திடல்  இனிது

நாலும் தெரிந்து நடப்பாய் -அதனை
நல்லது என்றே  கொள்வாய்
வேலுமஅருளும் துணையே  -இந்த
விவரம் அறிவது நலமே