சனி, 23 மார்ச், 2019

ஸ்ரீஹரி 638

ஸ்ரீஹரி  நாதா       ஓ      பரந்தாமா    ---தினம்
தேம்பியழும்      மாந்தர்      வாழ
தரிசனம்      தந்திடு   ---எங்கும்
தேனை      அள்ளி     வழங்கிடு

கூறுமடியார்    நன்கு      வாழ்ந்திட   --இங்கு
கொள்ளை     இன்பம்    சேர்த்திடு
ஏறுமயில்     ஏறி     வருவான்   ---உனக்கு
எந்த நாளும்    சொந்த     மருகனே

வெண்ணெய்      திருடித்      தின்றவா    ---அன்று
விண்ணும்      மண்ணும்     அளந்தவா
கண்ணன்     என்னும்     பெயரிலே   ---உலகில்
கால          காலம்       உள்ளவா

அஞ்சலென்ற     சொல்லைத்       தந்த  ---எங்கள்
அழகு வண்ண      மணி      மார்பனே
பஞ்சம்       நீங்கச்      செய்திடு     --வரும்
பகை மை     நீங்க     வைத்திடு

எந்த        நாளும்        மறப்பதில்லை     --எமக்கு
இனிய       நண்பன்       கண்ணனே
புன்னகை      பூக்கும்     மன்னனே    ---இந்த
புவனம்       ஆளும்  தெய்வமே

பெம்மானே 637

என்னைப்       படைத்தவன்       நீ  தானே   ---உனக்கு
என்மேல்       ஏனப்பா     இரக்கமில்லை
பொன்னினைத்     தேடி      அலைந்தேனா   --அழியாத
புகழினை     விரும்பி       வாழ்கிறேன்

கண்கள்      வடிக்கும்        நீர்திவலை   --எனக்கு
காலம்      முழுவதும்      மனக்கவலை
உன்னை     நினைத்திட    மறந்தேனா   --எனோ
உழன்று      தவிக்க     விடலாமா

நீரும்          நிலமும்     உள்ளவரை    --உன்னை
நினைவில்    வைத்து     மகிழ்ந்திடுவேன்
பேரும்       புகழும்       நீ கொடுப்பாய்    --என்னையுன்
பேரருள்     தன்னில்   திளைக்க  வைப்பாய்

அன்பால்       எந்தனை      வளர விட்டாய்    --எனக்குள்
ஆறாம்     அறிவை     நீ  கொடுத்தாய்
பண்பால்      என்னையே     உயரவிட்டாய்    ---தமிழில்
பண்டிதனாக்கி     கவிதைகள்     பாடவிட்டாய்

நன்றி       என்பதை      நான் மறவேன்    --என்
நாயகா உன்னடி      தினம்   பணிவேன்
என்றும்      எங்கிலும்     நீ  தானே ---உன்னிடம்
இருப்பதை      தருவாய்     பெம்மானே

மங்கையர் 636

மங்கையராக    மண்ணில்     பிறப்பதற்கு   ---நல்ல
மாதவம்        செய்திட     வேண்டுமென்று
செந்தமிழ்    புலவரன்று      சொன்னாரே    ---அதனை
சிந்தையில்     கொண்டிட     வேண்டாமா

வந்ததும்     நம்முடன்     வாழ்வதும்   ---என்றும்
வல்லமை    நிறையத்     தருவதும்
மங்கல       மகளிர்      தானல்லவா    --இதனை
மனதில்     கொள்வது   நலமல்லவா

கற்பினை     மனதில்      கொண்டவர்  ---அன்புடன்
காலம்       முழுவதும்      வருபவர்
அற்புத      அழகுகள்     உரியவர்    ---நமக்கு
அன்னையாய்     என்றுமே     காப்பவர்

நீயும்      நானும்    யாராலே   --இங்கு
நிம்மதி     பெறுவது     அவராலே
பேயாய்     அவரை     மதிப்பாயா     --நீ
பித்தனாய்     தெருவினில்     அலைவாயா

ஆணும்       பெண்ணும்     சரிசமமே   --உலகில்
அனைத்துப்     பொருளும்     பொதுஉடமை
வீணில்       மயங்கித்      திரியாதே     ---சொல்லும்
விவரம்       என்றும்     மறவாதே

(மகளிர்    தின ம்)

சனி, 16 மார்ச், 2019

கோலம் 635

அவன் ;    காதல்       வலையினை      வீசியென்னை    ---அன்று
                     கவனமாய்        சிறையினில்      அடைத்தவளே
                    வேதனை      அதிகம்       கொல்லுதடி    --மனம்
                    விரும்பிய     விதம்தனை     சொல்லுதடி
அவள் ;    சாதனை     எதுவும்     செய்யவில்லை   --இந்த
                    சவடால்        அளப்புக்கும்    குறைசல்  இல்லை
                   சோதனை      வந்தால்     பொறுத்துக்கையா  --பின்னால்
                   சுகமும்       உனக்கே      கிடைத்திடும்யா
அவன் ;   இரவில்     எனக்கும்     தூக்கமில்லை   --ஆனால்
                   இதயத்தில்     நிறைய     ஏக்கமுண்டு
                   உறவினைப்    பெற்றிட    மனமில்லையா  --நான்
                   உருகித்       தவிப்பது      தெரியல்லியா
அவள் ;   சொன்னதை      சொல்லும்     கிளிப்பிள்ளையா   --நாம்
                  சுகப்பட      நல்வழி      தெரியல்லியா 
                  உள்ளத்தை      நீயின்று        விளங்கிக்கையா   --நீயும்
                  உருப்பட       நல்ல தொழில்     செய்திடய்யா
அவன் ; கடமை     என்னவென்று      விளங்கிக்கிட்டேன்    --எந்தன்
                 கண்மணி     சொல்படி      நடந்துகிறேன்
                 உடமை       நீதாண்டி      எந்தக்  காலத்திலும்    --உன்னை
                 மறவேனடி      நான் எந்தக்    கோலத்திலும்  

என்னம்மா 634

ஐயிரண்டு      மாசங்கள்     சுமந்தாய்     ---நான்
அவனியில்     பிறந்திட     வைத்தாய்
பொய்யறியாது      என்னையும் நீ    வளர்த்தாய்   ---தமிழ்
புலவனாய்   என்னையன்ரே      அமைத்தாய்

அன்னைவழி      நானென்றும்      நடந்தேன்    ---உந்தன்
அருள்மொழி      கேட்டு நானும்    வளர்ந்தேன்
என்னாளும்     உனையிங்கு      மறவேன்    ---என்
இதயமே        நீயென்று      உணர்ந்தேன்

பொன்னாலே      செய்து வைத்த    உருவம்    --நீயோ
பூமியிலே        நடமாடும்       தெய்வம் 
கண்களோ      அன்பு மழை     பொழியும்    --உனது
காலடியில்      என்வாழ்வும்    பொலியும்

நின்றாலும்       நடந்தாலும்     அழகு    --உன்னை
நினைத்தாலே     உருவாகும்    சிறப்பு
மன்றாடும்       தென்றலும்      நீயே    --நானோ
மாறாத        சிறுபிள்ளை      தாயே

மனதிலே   கோவிலொன்று      அமைப்பேன்     --என்
மாதா நீ       குடியிருக்க        அழைப்பேன்
இனிதான       சுகவாழ்வு    தருவாய்    --என்னோடு
இருந்திட       என்னம்மையே     வருவாய்  

திங்கள், 11 மார்ச், 2019

கருணை 633

கண்ணில்      தோன்றும்      காட்சிகளில்    ---அன்பு
கண்ணனை      நானும்      நினைப்பேனே
என்னில்     உலவிடும்    உணர்வுகளில்   ---வரும்
இன்பங்கள்     கோடி     என்பேனம்மா

கங்கை     யாற்றின்      நடுவினிலே     ---அவன்
புரிந்த       காதற்கலைகளை     மறப்பேனா
மங்கையர்     உள்ளத்தில்    மாதவனாய்  --வாழும்
மகத்துவம்    என்னென்று    சொல்வேனம்மா

புல்லாங்      குழலிசை      நாதத்திலே    --இந்த
புவனம்     முழுதும்      மயங்குதம்மா
எல்லோர்   மனதிலும்   வாழ்கின்ற    ---நமது
இறைவன்    ஒருவனே    கண்ணனம்மா

வெண்ணெய்     திருடித்தினம்     விளையாடி   --நம்
விழிகளில்      நிறைந்தவன்    நந்தபாலனம்மா
புன்னை  மர க் காடுகளில்    நம்முடன்   ---அன்று
புகுந்து     விளையாடிய     தோழனம்மா

கண்ணன்    இருப்பான்      நம்மனங்களிலே   ---அவன்
கருணைதான்     காக்கும்     உலகினையே
எண்ணியே    அவனைப்    போற்றிடுவோம்    ---நல்ல
இந்தியராக     சிறப்புடன்     வாழ்ந்திடுவோம் 

சனி, 9 மார்ச், 2019

ஆண்டவன் 632

இறைவா      உன்னையே   அழைக்கின்றேன்   ---நீ
இன்னருள்    தருகவென     விழைகின்றேன்
மறவாத       மனமெனக்கு     அருள்வாயா    ---இந்த
மண்ணிலே     வரங்களைப்    பொழிவாயா

அழகாக      வருவாயா     மயில்மீதில்    --உனது
அடியார்கள்    மகிழ்வார்    புவிமீதில்
கலையாவும்     பொங்கிடும்   கனிச்சாறு    ---என்றும்
காண்பவர்      அடையலாம்    பெரும்பேறு

இருமாதர்     புடைசூழ     வரவேண்டுமே    ---உன்
இசைவானப்    புன்னகை     வரமாகுமே
குருவாக    வந்திட்ட   எங்கள்  குணசீலனே    ---உன்னை
கும்பிட      உலகெல்லாம்     மகிழ்வாகுமே

தமிழாக     வாழ்கின்ற      தலைவனல்லவா   ---உம
தாளடி      பணிந்தாலே     சுகமல்லவா
அமிழ்தமாய்     இனிக்கின்ற    அழகேசனே    ---அனுதினம்
நினைந்தார்க்கு      அருள்     ஈசனே

குணமென்னும்      குன்றேறி      நின்றவா    ---கொடும்
போரில்      பகைவர்தமை      வென்றவா
கணமேனும்     கலங்காத    மனம் வேண்டுமே    ---உந்தன்
காலடி ஒன்றுதான்     எனக்கென்றும்    துணையாகுமே