ஸ்ரீஹரி நாதா ஓ பரந்தாமா ---தினம்
தேம்பியழும் மாந்தர் வாழ
தரிசனம் தந்திடு ---எங்கும்
தேனை அள்ளி வழங்கிடு
கூறுமடியார் நன்கு வாழ்ந்திட --இங்கு
கொள்ளை இன்பம் சேர்த்திடு
ஏறுமயில் ஏறி வருவான் ---உனக்கு
எந்த நாளும் சொந்த மருகனே
வெண்ணெய் திருடித் தின்றவா ---அன்று
விண்ணும் மண்ணும் அளந்தவா
கண்ணன் என்னும் பெயரிலே ---உலகில்
கால காலம் உள்ளவா
அஞ்சலென்ற சொல்லைத் தந்த ---எங்கள்
அழகு வண்ண மணி மார்பனே
பஞ்சம் நீங்கச் செய்திடு --வரும்
பகை மை நீங்க வைத்திடு
எந்த நாளும் மறப்பதில்லை --எமக்கு
இனிய நண்பன் கண்ணனே
புன்னகை பூக்கும் மன்னனே ---இந்த
புவனம் ஆளும் தெய்வமே
தேம்பியழும் மாந்தர் வாழ
தரிசனம் தந்திடு ---எங்கும்
தேனை அள்ளி வழங்கிடு
கூறுமடியார் நன்கு வாழ்ந்திட --இங்கு
கொள்ளை இன்பம் சேர்த்திடு
ஏறுமயில் ஏறி வருவான் ---உனக்கு
எந்த நாளும் சொந்த மருகனே
வெண்ணெய் திருடித் தின்றவா ---அன்று
விண்ணும் மண்ணும் அளந்தவா
கண்ணன் என்னும் பெயரிலே ---உலகில்
கால காலம் உள்ளவா
அஞ்சலென்ற சொல்லைத் தந்த ---எங்கள்
அழகு வண்ண மணி மார்பனே
பஞ்சம் நீங்கச் செய்திடு --வரும்
பகை மை நீங்க வைத்திடு
எந்த நாளும் மறப்பதில்லை --எமக்கு
இனிய நண்பன் கண்ணனே
புன்னகை பூக்கும் மன்னனே ---இந்த
புவனம் ஆளும் தெய்வமே