வெள்ளி, 30 மார்ச், 2018

தேனும் பாலும் 322

அவன்;  ஆற்றங்கரை  யோரம் -நல்
                 அந்தி   படும்   நேரம் 
                 காற்றாட  வந்தவளே  கண்ணம்மா -கொஞ்சம் 
                 கண்  திறந்து  பாரடி  பொன்னம்மா 

அவள்;   வேலோடும்  விழி  யானேன் -உன் 
                 விரலாலே   சுகம்  ஆனேன் 
                 ஆளான  நாள்  முதலாய் -சின்னையா-நானும் 
                 ஆசை  வைச்சேன்  உன்மேலே  என்னய்யா 

அவன்;  ஊர் ஓரம்  எங்க  தோப்பு  உண்டு -இன்று 
                 ஒதுங்க  லாமா   நாம   கொஞ்சம் 
                 பேர்  சொல்ல  பிள்ளை  வேண்டும்  என்னடி -நீ 
                 பிரியமுன்னா   போகலாமே   முன்னாடி

அவள்; ஆசை மட்டும்  குறைச்சலில்லை -இங்கே
                யாரை   நம்ப   தெரியவில்லை 
                மோசம்  செய்ஞ்சு  போயிடுவே  தெரியுமா -நான் 
                முழுகாமே   கர்ப்ப  மாவேன்  புரியுதா

 அவன்; தொட்டா  கையை  விடவும்  மாட்டேன் -என் 
                 தோகை  உன்னை  மறக்க  மாட்டேன் 
                 பட்டினி   போட  வேண்டாம்  தங்கம்மா -நானும் 
                 பாஞ்சு  வந்து   காத்திடுவேன்  சிங்கமா

இருவரும்;  நாம்  இருவர்  ஒருவர்   ஆனோம் -உலகில் 
                        நல்லபடி  சேர்ந்து   வாழ்வோம் 
                         தேனும்  பாலும்   கலந்ததாக  ஆனோமே -அந்த 
                        தெய்வம்  வந்து   காத்தருள  வேணுமே    
                  





                  

வியாழன், 29 மார்ச், 2018

அழகு- 321

கற்பனை   வானில்  பறந்து  வந்தேன் -என்
கண்களால் அழகினை  காண  வந்தேன்
நின்றால்    நடந்தால்  நிலம்  அழகு -அதை
நினைக்க நினைக்க  மனம் அழகு

ஓடும் அருவிகள்  தரும்  அழகு -மேலே
உயரப்  பறப்பதும்  வெகு அழகு
பாடும்  குயிலும்  புது  அழகு -அதனை
படைத்த  இறைவனோ  பேரழகு

தமிழை  படித்திட  வரும்  அழகு -நம்
தலைவர்கள்  பேசசும்  தான் அழகு
அமிழ்தம்  என்றும்  நமக்கு   அழகு -இதனை
அறிந்து   கொள்வது  பெரும்  அழகு

நிமிர்ந்து  நடக்க   நீ  அழகு -பெண்ணை
நினைத்து  ரசித்திட  வரும்  அழகு
உயர்ந்த   எண்ணம்  உனக்கு  அழகு -பிறர்க்கு
உதவிகள்  செய்தால்  பலன்  அழகு

வானம் தந்திட்ட  நிலா  அழகு -ஏழைக்கு
வாரி   வழங்குதல்   நல் அழகு
தானம்   என்பது  தனி  அழகு -உலகில்
தாயும்  தமிழும்  எனக்கு  அழகு

-

உல்லாசம் 320

வானில்   நிலவு -ஒரு
வட்டம்   போட்டது
காணும்  கண்களில் -பல
கவிதை   மலர்ந்தது

காட்டில்   பறவைகள் -நல்ல
கானம்   இசைத்தன
வீட்டில்   மனிதர்கள் -எனோ
விளக்கை   ஒளித்தனர்

விலைகள் உயர்ந்தன -எங்கும்
விளைச்சல்  குறைந்தது
களைகள்  வளர்ந்தன -மண்ணில்
கவலைகள்  சூழ்ந்தன

ஊரார்  காசினில்  உல்லாசம் -தினம்
ஒய்யாரி  பலருடன்  சல்லாபம்
பணத்தை  மலையாய்  குவித்தார்கள் -கொடும்
பாவத்தை  தலைகளில்  சுமந்தார்கள்

பேசியே  பொழுதினை  கழித்தார்கள் -மக்கள்
பிழைக்கும்   வழியை  தடுத்தார்கள்
வீசிடும்  காற்றை  கெடுத்தார்கள் -மனதில்
வெறுப்பை   அதிகமாய்  வளர்த்தார்கள்

வானம்  தருவது  மழையாகும் -நல்வழியினை
மறப்பது  பெரும்  பிழையாகும்
வீணாய்  இருப்பது  சுமையாகும் -இந்த
விவரம்   அறிவது  நலமாகும் 

புதன், 28 மார்ச், 2018

திருத்தொண்டன் -319

முல்லை  மலர்  சிரிப்பிலே
மோகம்  வரும்  நினைப்பிலே
கள்ளம்  ஏதும்  இல்லையடி  மனசிலே -நீ
கண் திறந்து  பாரடி  என்னை  நேரிலே

தென்றலாக  வீசினேன்
தேனை யள்ளி  பூசினேன்
அன்றில்  போல  வாழலாமா  மயிலே -உன்னை
அள்ளிக்கொள்ள  வேண்டு மடி  வாழ்விலே

ஒன்று பட்டு  வாழலாம்
ஊர்கள்  தோறும்  போகலாம்
நன்று என்ரே  நினைத்து விடு -கிளியே
நம்பி நீயும்  வந்திடுவாய்  வெளியே

பொன்னும் பொருளும்  நிறைய  உண்டு
பொங்கும்  இளமை  தானும்  உண்டு
கண்ணில்   வைத்துக்  காப்பேன்  கனியே
காதல்  வேகம்  மீறுதடி  மயிலே

உன்மடியில்  நான்  வசிக்க
உத்தரவு  தந்து  விடு
தென் பொதிகை  தென்றலும்  நீயடி -உன்னை
தேடி வந்த  திருத்தொண்டன்   நானடி



செவ்வாய், 27 மார்ச், 2018

உள்ளம் -318


இதழ் தரும்  சுவைதனை  நாடி  வந்தேன் -உன்
இருவிழி  பாதையை  தேடி  வந்தேன்
முதல் முதலாய்  பேரெழில்  முகமும்   கண்டேன் -அதில்
முழுவதும்  என்னை  நான்  கரைத்துக்கொன்டேன்

கண்களின்  அழகோ  என்றைக்கும்  வான் நீலம் -உனது
கனிஇதழ்  புன்னகை   வெகு  தாராளம்
பெண்களில்  ராணி   எனச் சொல்லவா -அதனால்
பித்தம்  அடைந்தவன்   எனக்  கொள்ளவா

நீ  காலடி  நடந்திட  புதுக்  கவிதை  உண்டு -பல
கவிஞர்கள்  பாடுவார்  உன்னைக்கண்டு
சேலடி  வேலடி  பொற்சிலை   நீ எனக்கு -உன்னை
சேர்ந்திட்ட  பெருமையோ  எனக்கு  இருக்கு

முத்துக்கள்   மயங்கிடும்  வெண் பல்வரிசை -உன்னிடம்
மோதினால்  தோற்பவர்  நிற்பது  பலவரிசை
கத்திடும்  குயில்  உந்தன்  கானமடி -உன்
காலடி  தொழுதால்  பெறுவது  புது ஞானமடி

இரவுக்குள்  முழு நிலவென  நீ இருப்பாய் -நான்
இமைகளை  மூடாமல்  காவல்  நிற்பேன்
உறவுக்குள்  வந்திட   உன் மனம்  தொல்லையோ -எனது
உள்ளம்  களித்திட  நல்வழி  இல்லையா 

வல்லமை 317



நிலவில்   என்னவோ   உன்முகம்  தெரியுது -அடி  
உன்னை   நினைச்சிடவே  எந்தன்  மனம்  இனிக்குது 
கனவிலே  தினம் தினம்  கலங்க வைக்கிற-ஏனோ   
கல்யாணம்  என்று சொன்னால்  காதம்  ஓடுறாய் 

பல காலம்  உன்னை நினைச்சு  பரிதவிக்கிரேன் -உனது  
பாதம்  தொட்டு  பூசை  செய்ய  நாளும்  பாக்குறேன் 
சிலையைப்போல  உருவமுள்ள  சிற்றிடைக்காரி - நீ 
சிரிச்சு  விட்டால்  எஞ்சீவன்  போக்கும்  சில்மிசக்காரி 

அலையை  போல  ஆடித்தவிக்கும்  ஆம்பள  மனசு -அதை 
ஆட்டிவைத்து  ரசிக்க  பாக்கும்  உன்னிள  வயசு 
நிலையை  நன்கு  தெரிஞச போதும்  உன்மனம்  கல்லு -உன்னால் 
நிம்மதியை  தொலைச்சு  புட்டேன்  நீ பதில்  சொல்லு 

பகல் இரவு  தூக்கம்  தொலைஞ்சு  பரிதவிக்கிறேன் -தினம் 
பாய்ந்து  தழுவ  துடிதுடித்து  நானும்  மயங்குறேன் 
அந்தி  வெய்யல்  மாலையிலே   அலைஞ்சு  பாக்கிறேன் -நீ 
அகப்படுவாய்  என்று எண்ணி   ஆலாய்  பறக்கிரேன் 

செம்பவள  இதழை  திறந்து   சிரிப்பு   காட்டடி -அதில் 
சிக்கிக்கொண்ட  எந்தன் மேலும்  கருணை  வையடி
அம்புலியை  கேட்டாலும்  அள்ளித் தருவேன் -ஒரு   
அசசாரம்  தந்து விட்டால்  ஆனந்தம்  அடைவேன் 

கெஞ்சி கெஞ்சி  கேட்டபோதும் மிஞ்சிப்  போனவள் -உனது 
கெடுமதியை உணராமல்  உலகில்  கேலிக்கானவன்  
வஞ்சி உந்தன்  காலடியில்  வணங்கி  மகிழவேன் -நான் 
வாழ மட்டும்  வரமும்  தந்தால்  வல்லமை  கொள்ளுவேன் 

ஞாயிறு, 18 மார்ச், 2018

காதல் கதை - 316

நிலவில்     காதல்
நினைவில்   காதல்
உறவில்   காதல்
உயிரில்    காதல்

கண்ணும்  கண்ணும்
கலப்பதும்  காதல்
காதலர்   இருவர்
களிப்பதும்  காதல்

பெண்ணுள்  ஆணையும்
பிணைப்பதும்   காதல்
பேதமை   நீங்கவே
பிறந்தது   காதல்

உயிரின்   உள்ளே
உறைவது   காதல்
உன்னையும்   என்னையும்
துளைப்பது   காதல்

எல்லாப்   பொருளிலும்
இணைவது   காதல்
ஈசனார்   உள்ளத்தில்
இயங்குதல்   காதல்

பனிமழை -315

அடடா    இதுவென்ன
   புதுக்கோலம்
ஆண்டவன்   எழுதிய
  எழிற்கோலம்

இலைகளின்   மேலே
  பனிக்கூட்டம்
இசையுடன்    ஆடுது
   சதிராட்டம்

தெருவினில்   தெரியுது
  மாக்கோலம்
தேன்மழை   பொழியுது
  தினந்தோறும்

சாலைகள்   எங்கிலும்
 பனிமழையே
சரிசெய்தல்   எப்படி
விளங்கலியே

வேலைகள்   முடங்கின
விடுமுறை   தொடங்கின
நாளைய   உலகம்
எங்கணுமோ

(வேறு)
அந்த   நாயகன்
அறிவான்   ரகசியமே



நம்பிக்கை -314

கண்ணிலே   காதலை    - தினம்   
கவனமாய்  சுமப்பவள் 
கலைகளின்   வடிவிலே -எங்கும் 
கற்பனை   ஊற்றவள் 

என்னிலே   எழுத்திலே   -இங்கே 
எல்லாமாய்   ஆனவள் 
ஈரெட்டு  வயதிலே -நல்ல 
இளமையின்   சாறவள் 

பொன்னிலே   பூவிலே   -பொங்கும் 
புதுமையாய்  மிளிர்பவள் 
பொறுமையின்   வடிவிலே  -என்றும் 
பூமியை   ஆள்பவள்  
  
நாளைய    உலகினை  -உலக 
நன்மைக்காய்   சமைப்பவள் 
நம்பிக்கை    ஒளியினை -வாழும் 
நமக்கென   அளிப்பவள்