கண்ணால் கவிதை சொன்னாய் ----உனது
காதலால் என்னை வளைத்தாய்
பொன்னில் செய்த பூவே ----உன்னை
புகழும் கவிஞன் நானே
அன்பைத் தேடி வந்தேன் ---உனது
அழகில் மயங்கி நின்றேன்
எண்ணி ஏங்கி இளைத்தேன் ----நீயோ
என்றும் இனிக்கும் மலைத்தேன்
உலவும் காற்றும் சொல்லும் ----உன்
உறவு எதையும் வெல்லும்
பருகும் பாலும் புளிக்கும் ---உனது
பார்வை உலகை மயக்கும்
நிலவை நினைக்க கொதிக்கும் ----என்
நெஞ்சம் நிதமும் நினைக்கும்
களவைக் கற்க துடிக்கும் ----உனது
கருணை என்னை இழுக்கும்
அன்பில் வாழ்வோம் கூடி ---இந்த
அகிலம் முழுதும் ஓடி
நண்பர் போல வாழ்வோம் ---வரும்
நாளில் உலகை ஆள்வோம்
காதலால் என்னை வளைத்தாய்
பொன்னில் செய்த பூவே ----உன்னை
புகழும் கவிஞன் நானே
அன்பைத் தேடி வந்தேன் ---உனது
அழகில் மயங்கி நின்றேன்
எண்ணி ஏங்கி இளைத்தேன் ----நீயோ
என்றும் இனிக்கும் மலைத்தேன்
உலவும் காற்றும் சொல்லும் ----உன்
உறவு எதையும் வெல்லும்
பருகும் பாலும் புளிக்கும் ---உனது
பார்வை உலகை மயக்கும்
நிலவை நினைக்க கொதிக்கும் ----என்
நெஞ்சம் நிதமும் நினைக்கும்
களவைக் கற்க துடிக்கும் ----உனது
கருணை என்னை இழுக்கும்
அன்பில் வாழ்வோம் கூடி ---இந்த
அகிலம் முழுதும் ஓடி
நண்பர் போல வாழ்வோம் ---வரும்
நாளில் உலகை ஆள்வோம்