சனி, 30 நவம்பர், 2019

மலைத்தேன் 8 1 3

கண்ணால்          கவிதை         சொன்னாய்     ----உனது
காதலால்            என்னை        வளைத்தாய்
பொன்னில்      செய்த      பூவே      ----உன்னை
புகழும்        கவிஞன்        நானே

அன்பைத்        தேடி        வந்தேன்     ---உனது
அழகில்        மயங்கி      நின்றேன்
எண்ணி      ஏங்கி       இளைத்தேன்   ----நீயோ
என்றும்        இனிக்கும்      மலைத்தேன்

உலவும்        காற்றும்         சொல்லும்    ----உன்
உறவு         எதையும்        வெல்லும்
பருகும்       பாலும்       புளிக்கும்    ---உனது
பார்வை      உலகை       மயக்கும்

நிலவை       நினைக்க       கொதிக்கும்    ----என்
நெஞ்சம்      நிதமும்        நினைக்கும்
களவைக்       கற்க      துடிக்கும்      ----உனது
கருணை       என்னை      இழுக்கும்

அன்பில்         வாழ்வோம்         கூடி     ---இந்த
அகிலம்        முழுதும்        ஓடி
நண்பர்         போல        வாழ்வோம்     ---வரும்
நாளில்        உலகை       ஆள்வோம்  

வெள்ளி, 15 நவம்பர், 2019

கோயில் 8 1 2

அறிவோம்        அண்ணலே      உம் பெருமை    ----அதனை
அனுதினம்      போற்றுதல்     எம்கடமை
தெரியாத      பொருளைத்    தெரிய      வைப்பாய்    ----வரும்
தீமைகள்      அனைத்தையும்      போக்கி    வைப்பாய்

மனதினில்      கோயிலும்       உனக்காக    ---தமிழ்
மலர்கள்       சொரிவேன்       கணக்காக
கனவையும்      நனவாய்      மாற்றிடுவாய்   ---எங்களை
காலம்      முழுதும்      நன்றாய்      வாழ  வைப்பாய்

கடலைப்       போன்றது      உம்   மனது    ---உன்
காலடி      ஒன்றுதான்      பெரும் பேறு
மடமை      நீங்கிட     மனம்    கனிவாய்    ----தமிழ்
மண்ணகம்       ஆண்டிட     உதவி    செய்வாய்

மங்கையர்       மகிழ்ந்திட     வரம்    கொடுப்பாய்   ---நன்
மக்களாய்       வாழ்ந்திட       வழி   வகுப்பாய்
சிங்கமாய்ச்       சீறிட       வீரம்    கொடு    ---அவர்
சிறப்புடன்      விளங்கிட      உன்  வாளை      எடு

என்னையும்      எந்நாளும்         எழுத    விடு    ----இந்த
ஏழையின்      வாழ்விலே       ஒளியைக்    கொடு
மண்ணையும்     மக்களையும்     காத்து     நில்லு   ---வரும்
மாயங்கள்      யாவையும்      தூரத்   தள்ளு 

ஆனந்த ஜோதி 8 1 1

கார்     முகில்       வண்ணா    ---உலகில்
ஏழையைக்      காத்திட       வருவாய்
பார்த்தனுக்கு     சாரதியாய்     பணி  புரிந்தாயே   ---அவர்
பாரதப்     போரில்     ஜெயித்திடவே     துணை    புரிந்தாயே

நீக்கமற       நிறைந்து நிற்கும்      நிர்மல      ஜோதி    ----உன்னை
நித்தமும்      நினைப்பவர்க்கு      ஆனந்த  ஜோதி
பார்க்கின்ற    கண்களுக்குப்     பரவசம்     நீயே    ----உன்னை
பணிந்து     நிற்கும்     பக்தர்க்கு     தரிசனம்     தருவாய்

கன்னியவள்   மானம்     காக்க     கருணை      செய்தவன்   ----கோபி
கன்னிகைகள்     மனதிலே     நன்கு     கலந்து      விட்டவன்
எண்ணி ஏங்கி    அழுத      பேர்களிடம்      எதிரில்    வந்தவன்    ---அன்று
இணையில்லாக்      கீதை     தந்து      இதயம்     வென்றவன்

ஆநிரையை    மேய்க்க     வந்த       ஆயர்    பாலகன்   ===கொடிய
அரக்கர்களைக்        கொன்று      நல்ல     அமைதி      காத்தவன்
தேனைப்      போல      இனிக்கின்ற         தெய்வம்     நீயப்பா   ---உன்னை
தினமும்       தொழுதாலே    மனிதர்க்கு     தீரும்     நோயப்பா

காப்பதற்கு       எங்களுக்கு   மீண்டும்     கண்ணன்     வேண்டுமே   ---அவர்
கருணையினால்      மக்களுக்கு   வரும்    கவலை    தீருமே
பாக்களெல்லாம்    போற்றுகின்ற    எங்கள்   பரந்தாமனே   ----உன்னை
பாடி  தினம்      நாங்கள்     மகிழ்ந்திட     நல்வரங்கள்      தாருமே 

கருணை 8 1 0

இமையாக         வந்தாய்     ----இன்று
எமைக்         காத்து      நின்றாய்
உமையென்றும்        மறவேனே     ஐயா     ---மனதில்
உள்ளதைச்       சொல்கிறேனே      மெய்யாய்

ஐயா         நின்கருணை        ஆழ்கடலாகும்   ----இந்த
அடியேனின்      சேவை      சிறுமடலாகும்
பையவே      காத்திட   எங்கள்     பரமனே     வருவாய்    ----உலகில்
பாபங்கள்        நீக்கி      நற்பதம்        அருள்வாய்

ஏழையென்ற       சொல்        இல்லாது       போக    ---மண்ணில்
இருப்பதை       வைத்து      இன்பமாய்      வாழ
நாளைய        பொழுது       நன்மையாய்      வேண்டும்   ---எங்கள்
நாயகன்        அருளால்       நலமெய்த     வேண்டும்

மங்கல        மங்கையர்        மகிழ்வாக      வேண்டும்   ---எங்கள்
மனைகளில்      செல்வங்கள்       மலையாக     வேண்டும்
பங்கமிலா       வாழ்வு        பரிசாக       வேண்டும்    ----எம்
பாரதத்தின்     பெருமைகள்      பலர்      அறிய  வேண்டும்

மாதம்      மும்மாரி       மண்ணிற்கு       வேண்டும்   ----எம்
மக்களின்       உழைப்பு    மதிக்கப்பட     வேண்டும்
பேதமில்லா    வாழ்வு  ஏழைக்கும்     வேண்டும்   ---எங்கள்
பெம்மானே       நீவிர்     பிழை    பொறுத்தல்   வேண்டும்  

வெள்ளி, 8 நவம்பர், 2019

அன்பு 8 0 9

நின்றேன்        நடந்தேன்         நெடும்     தூரம்     ---உன்
நினைவே        எனக்கு       வழிகாட்டும்
அன்பால்        இணைவோம்      பலகாலம்   ---மன
அமைதி        நிலவுமே       எக்காலம்

அன்பால்       இணைந்து      கட்டுண்டோம்    ---நம்
மனதில்       கோவில்      கட்டி    வைப்போம்
இன்பம்       இனிமேல்      வரவாகும்  ----நமது
இதயம்       துடிப்பது      உறவாகும்

மணநாள்       வருமே        மகிழ்வாக    ----பின்
மழலைகள்     வரலாம்     துணையாக
கணமும்       நாமும்      பிரியோமே    ----நம்
காதல்       உலகிற்கு    நல்விடையாகும்

இறைவன்      கருணை       நமக்குண்டு    ---அவர்
இதயத்தில்     நமக்கொரு     இடமுண்டு
கரையும்       பொழுதும்       ஓடிவிடும்    ---உயர்
காதல்        என்றுமே       வாழ்ந்துவிடும்

நன்றியே        நமக்கு        நினைவாகும்    ----பிறர்
நன்மையே     வாழ்வில்     சுவையாகும்
அன்பெனும்    நிலையினில்      ஆடுகிறோம்    ----அந்த
ஆண்டவன்       அருளால்      வாழுகிறோம் 

நல்ல காலம் 8 0 8

கலை        ஞா ன          வடிவிலே     ----என்
கண்களில்         நீயும்      தெரிகிறாய்
விலையே      யிலாப்      பொருளே     ---உன்னை
வேண்டித்       தினமும்      வணங்குவேன்

அள்ளித்          தரும்        வள்ளலே   ---உனது
அழகில்          நானும்      மயங்குவேன்
கள்ள      மில்லாச்        சிரிப்பிலே     ---நான்
கவிதைகள்        கோடி      எழுதுவேன்

கள்ளம்       தெரியாப்       பிள்ளையாய்   ---என்னை
காவல்       காக்க        வேண்டுமே
உள்ளமதில்      கோவிலாய்    தினம்    ---நான்
உன்னைப்        பூசை       செய்குவேன்

ஊற்று         போல       செல்வமும்     ----எனக்கு
உயர்ந்த        கல்வி       ஞானமும்
சேர்த்து       நிறையத்       தாருங்கள்    ---இந்த
சேயைக்        காத்திட      வாருங்கள்

காலம்        ஓடி        மறையலாம்    ----உயர்
கருணை         அன்பு      மறையுமோ
நாளும்        இனி        நல்ல நாள்   ----உனக்கு
நன்றி        சொல்லி       வாழ்கிறேன்