அன்பர்கள் மனதினை ஆள்பவன் ரங்கனம்மா --அவனை
அனுதினம் நினைத்தாலே ஆனந்தம் கோடியம்மா
துன்பம் நீக்க வரும் தூய த் தொண்டனம்மா --நமக்கு
துணையாக வந்துதவும் நல்ல துணைவனும் அவனேயம்மா
கால்களைக் கண்டாலே நம் கண்கள் சொரியுமம்மா --அவனது
கண்விழி பட்டாலே கவலைகள் பறக்குமம்மா
நால் வகை வேதமும் நாயகன் உருவமம்மா ---உலகில்
நம்பிய பேர்களுக்கு நற்கதி அருள்வானம்மா
பாம்பணை மெத்தையில் படுப்பது பரந்தாமன் ---அவனை
பணிந்தவர் இல்லம் பாரினில் ஜொலிக்குமம்மா
நம்பிய ஏழைக்கும் நல்வழி கிடைக்குமம்மா --உலக
நாயகன் அருளாலே நானிலம் செழிக்குமம்மா
திருமால் மார்பினில் தேவியவள் வாசம் ---அவளை
தினமும் துதித்தால் சேர்ந்திடும் திரவியமே
உருகாத மனமெல்லாம் உருகிடும் நிச்சயமே --அன்புடன்
உளமாற நினைத்தாலோ வரும் உயர்வுகள் சாத்தியமே
ஏகாதசி நாளில் நம் இறைவனை தொழுதிடுவோம் ---இங்கு
இகபர சுகங்களை இன்றேனும் பெற்றிடுவோம்
போகாத வழியினில் போகுதல் தீதாகும் --செய்யும்
புண்ணியம் ஒன்றேதான் நமக்கு புனர்ஜென்மம் அளிக்குமம்மா
பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில் வைகுந்த ஏகாதசி வைபவத்தை
சிறப்பிக்க அடியேனால் இயற்றப்பட்டது )
அனுதினம் நினைத்தாலே ஆனந்தம் கோடியம்மா
துன்பம் நீக்க வரும் தூய த் தொண்டனம்மா --நமக்கு
துணையாக வந்துதவும் நல்ல துணைவனும் அவனேயம்மா
கால்களைக் கண்டாலே நம் கண்கள் சொரியுமம்மா --அவனது
கண்விழி பட்டாலே கவலைகள் பறக்குமம்மா
நால் வகை வேதமும் நாயகன் உருவமம்மா ---உலகில்
நம்பிய பேர்களுக்கு நற்கதி அருள்வானம்மா
பாம்பணை மெத்தையில் படுப்பது பரந்தாமன் ---அவனை
பணிந்தவர் இல்லம் பாரினில் ஜொலிக்குமம்மா
நம்பிய ஏழைக்கும் நல்வழி கிடைக்குமம்மா --உலக
நாயகன் அருளாலே நானிலம் செழிக்குமம்மா
திருமால் மார்பினில் தேவியவள் வாசம் ---அவளை
தினமும் துதித்தால் சேர்ந்திடும் திரவியமே
உருகாத மனமெல்லாம் உருகிடும் நிச்சயமே --அன்புடன்
உளமாற நினைத்தாலோ வரும் உயர்வுகள் சாத்தியமே
ஏகாதசி நாளில் நம் இறைவனை தொழுதிடுவோம் ---இங்கு
இகபர சுகங்களை இன்றேனும் பெற்றிடுவோம்
போகாத வழியினில் போகுதல் தீதாகும் --செய்யும்
புண்ணியம் ஒன்றேதான் நமக்கு புனர்ஜென்மம் அளிக்குமம்மா
பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில் வைகுந்த ஏகாதசி வைபவத்தை
சிறப்பிக்க அடியேனால் இயற்றப்பட்டது )