ஞாயிறு, 23 டிசம்பர், 2018

ஸ்ரீ ரங்க நாதர் 622

அன்பர்கள்     மனதினை   ஆள்பவன்    ரங்கனம்மா    --அவனை
அனுதினம்   நினைத்தாலே   ஆனந்தம்   கோடியம்மா
துன்பம்     நீக்க  வரும்    தூய த்    தொண்டனம்மா    --நமக்கு
துணையாக    வந்துதவும்     நல்ல   துணைவனும்    அவனேயம்மா

கால்களைக்    கண்டாலே   நம் கண்கள்    சொரியுமம்மா   --அவனது
கண்விழி   பட்டாலே     கவலைகள்   பறக்குமம்மா
நால் வகை    வேதமும்    நாயகன்   உருவமம்மா    ---உலகில்
நம்பிய      பேர்களுக்கு     நற்கதி      அருள்வானம்மா

பாம்பணை    மெத்தையில்    படுப்பது     பரந்தாமன்    ---அவனை
பணிந்தவர்   இல்லம்      பாரினில்    ஜொலிக்குமம்மா
நம்பிய    ஏழைக்கும்     நல்வழி     கிடைக்குமம்மா    --உலக
நாயகன்    அருளாலே        நானிலம்     செழிக்குமம்மா

திருமால்     மார்பினில்    தேவியவள்     வாசம்    ---அவளை
தினமும்     துதித்தால்     சேர்ந்திடும்    திரவியமே
உருகாத    மனமெல்லாம்   உருகிடும்    நிச்சயமே    --அன்புடன்
உளமாற      நினைத்தாலோ    வரும்    உயர்வுகள்    சாத்தியமே

ஏகாதசி    நாளில்    நம்   இறைவனை     தொழுதிடுவோம்  ---இங்கு
இகபர      சுகங்களை    இன்றேனும்      பெற்றிடுவோம்
போகாத    வழியினில்   போகுதல்   தீதாகும்    --செய்யும்
புண்ணியம்    ஒன்றேதான்   நமக்கு   புனர்ஜென்மம்     அளிக்குமம்மா

பூலோக   வைகுந்தமான   திருவரங்கத்தில்   வைகுந்த   ஏகாதசி  வைபவத்தை
சிறப்பிக்க     அடியேனால்   இயற்றப்பட்டது ) 

வியாழன், 20 டிசம்பர், 2018

கண்கள் 621

நெஞ்சினில்    காதலி     நீயா    இல்லை  --உன்னை
நினைக்க    இன்பம்   வருமே   கொள்ளை
அஞ்சுதல்    உனக்கு    ஆகுமோ    கண்ணே ---நாம்
அன்பிலே   இணைந்து    வாழுவோம்    பெண்ணே

கண்களில்   கனவுகள்   உன்னால்    கண்டேன்   --உனது
கட்டழகெனும்    அமுதினை   நானே    உண்டேன்
பெண்களின்   பெருமை   நீயே    அன்றோ   --நான்
பித்தனாய்   திரிவது    முறையோ   நன்றோ

என்ன   சொல்லி    உந்தனை  அழைப்பேன்   --என்
இருவிழி    கண்ணீரில்   உன்னையும்    நனைப்பேன்
கன்னல்    தமிழும்    கசந்திடும்   நிலையே   --வாழும்
காலம்   முழுதும்   கைவிடல்      சரியோ

இரவும்   பகலும்   இனிமேல்     ஏது   ---வரும்
இன்பமோ   துன்பமோ   என்னுள்   வேண்டேன்
உறவினை    நினைத்து    உலகில்    வாழ்ந்தேன்  --இங்கு
உன்மனம்      வெறுத்திடில்    எங்கே    போவேன்

கால்கள்    செல்லும்    வழியில்    நடப்பேன்   --உனது
காதலை      புனிதமாய்     என்னுள்    நினைப்பேன்
நாளினைக்    கடந்து   நல்வழி   சேர்வேன்    --எந்தன்
நாயகி   உன்னையே     நானே   மணப்பேன்  

தென்றல் 620

தென்றலெனும்      தேரேறி      வந்தாள்    -எனக்கு
தேனான      விருந்தினை   தந்தாள்
பெண்ணில்    அவளே    தலைவி    --அவளை
பிரியாமல்     இருப்பேனோ    பழகி

கண்களில்    வருவது   புயல்     --அவளது
கைகளில்   காமனது   வில்
பொன்னெனும்    ஆடையை    அணிந்தாள்  --என்னை
புழுவாக்கி     துடித்திட    நினைந்தாள்

ஈரெட்டு    வயதான    இளமை   --தினம்
எடுத்தாலும்   புசித்தாலும்    இனிமை
கார்வெட்கும்    கூந்தலோ   வெகு   நீளம்   --அவள்
கண்களில்    உள்ளது   கடலின்  ஆழம்

இட்டாலும்   நோகுமவள்     பாதம்    --காதல்
எல்லோர்க்கும்    உரைப்பாளே    வேதம்
தொட்டாலும்    மனக்கின்ற    வாசம்    --அவள்
பின்னாலே   தொடர்வேன்    நேசம்

இரவிலும்   பகலிலும்    நினைவு   -தினம்
ஏன்தானோ   காணுகிறேன்    பல கனவு
உறவுக்கு    அவள்தான்    மருந்து   --நானும்
உலகினில்   இருப்பேனோ    மறந்து 

புதன், 19 டிசம்பர், 2018

தென்றலெனும்         தேரேறி       வந்தாள்    --எனக்கு
தேனான         விருந்தினை       தந்தாள்
பெண்ணில்      அவளே      தலைவி      --அவளை
பிரியாமல்        இருப்பேனே     பழகி

கண்களில்     வருவது     புயல்     ---அவளது
கைகளில்       காமனது      வில்
பொன்னெனும்      ஆடையை      அணிந்தாள்   --என்னை
புழுவாக்கித்   துடித்திட      நினைந்தாள்

ஈரெட்டு        வயதான     இளமை    ---தினம்
எடுத்தாலும்    புசித்தாலும்    இனிமை
கார்வெட்கும்    கூந்தலோ   வெகு   நீளம்   --அவள்
கண்களில்     உள்ளது      கடலின் ஆழம்

இட்டாலும்    நோகுமவள்      பாதம்    --காதல்
எல்லார்க்கும்     உரைப்பாளே     புதுவேதம்
தொட்டாலும்     மணக்கின்ற    வாசம்    --அவள்
பின்னாலே    தொடர்வேனே    நேசம்

இரவிலும்    பகலிலும்    அவள் நினைவு    --தினம்
எனக்குள்      வருமே      பலகனவு
உறவுக்கு     அவள்தானே    மருந்து    --நானும்
உலகில்    இருப்பேனோ     மறந்து 

திங்கள், 10 டிசம்பர், 2018

வெற்றி 619

நிலவால்        முகம்         மலர்ந்தேன்   --காதல்
நினைவால்    உயிர்     வளர்த்தேன்
தலைவா     என்னிடம்    வருவாயா   --என்னை
தழுவி       சுகமும்     தருவாயா

மனதில்       என்றும்     கள்ளமில்லை   --எனது
மையல்       உனக்குத்   தொல்லையில்லை
இனிமை    வாழ்வினில்     கிடைத்திடுமா     --உள்ள
இளமை    வளமாய்    நிலைத்திடுமா

கண்களில்    காதல்    மயக்கமய்யா   --என்னை
கலந்திட      இன்னுமா   தயக்கமய்யா
பெண்ணின்    உலகம்    பெரிதல்லவோ  --நான்
பிழைகள்     செய்தால்    பொறுத்திடய்யா

இரவு       முழுதும்       தூக்கமில்லை   --என்
இதயம்      நிறைய   ஏக்கமுண்டு
உறவு    பெருகிட    மனமில்லையோ    --என்
உயிரும்    உனக்கு     பெரிதில்லையோ

காலங்கள்    போயினும்    காத்திருப்பேன்   --தூய
காதலை    நெஞ்சினில்    பூத்திருப்பேன்
வேலவன்    நினைத்தால்    வெற்றியுண்டு    --நீயும்
விரும்பி     மணந்தால்       சுற்றமுண்டு 

மன்னன் 618

கந்தன்     பெயரைச்      சொல்லு     ---வந்த
கவலையை       விட்டுத்     தள்ளு
எந்த       வினையும்     மாறும்    --அவன்
வரங்கள்      நம்மைச்     சேரும்

மலையினில்      குடியாய்      இருப்பான்   ---ஏழை
மனசில்         நிலையாய்        சிரிப்பான்
கலைகளில்    சிறந்த     மன்னன்     --தொந்தி
கணபதி      இவனுக்கு    அண்ணன்

தமிழும்       முருகனால்    வாழும்    --எதிர்க்கும்
தருக்கர்     படைகள்       மாளும்
அமிழ்தம்      போலவே    இனிப்பான    --தனது
அடியவர்      சுகம்பெற     நினைப்பான்

மனைவிகள்      இருவர்      உண்டு    ---அவனது
மனமோ         பிறருக்குத்      தொண்டு
துணையாய்     ஓடியே     வருவான்   ---என்றும்
சொக்கத்       தங்கமாய்    ஜொலிப்பான்

வாழும்       காலம்     அறிவாய்   --முருக
வள்ளல்      தன்னையே     நினைவாய்
வீழும்        கண்ணீர்      துடைப்பாய்   --உலகில்
வெற்றி      வீரனாய்      நடப்பாய்