சனி, 3 செப்டம்பர், 2022

என்றும் ;     831

உலகம்    நல்லா புரிஞ்சிடுச்சு ---இருக்கும் 

உண்மை  நிறைய  தெரிஞ்சிடுச்சு 

கலகம்     தீர்ஞ்சிடுச்சு    தங்கமே   ---நம்ம 

கண்ணன்    துணையிருக்கு   என்றுமே 

 ஊர்கள்    செழிக்க    வேணும்   --நம் 

உயிர்கள்     பிழைக்க    வேணும்   

வேர்கள்      வாழ    வேண்டும்   --தங்கமே 

விவசாயம்   வளர   வேண்டும்   எங்குமே 

இல்லை    யென்பதும்      இல்லை   --அது 

இருந்தாலோ     இன்னும்    தொல்லை 

கள்ளம்        மறைய    வேண்டும்    தங்கமே   --வந்த 

கவலைகள்     நீங்க     வேண்டும்    தங்கமே 

கல்வி       பெருக       வேண்டும்   ---உலகில் 

கற்றோர்     நிறைய      வேண்டும் 

சொல்லில்     உண்மை     வேண்டும்  தங்கமே  --இனிய 

சொர்க்கம்     மண்ணில்    உண்டு     நம்புமே 

இருந்ததை       சொல்லி      வைத்தேன்  ---எனது 

இதயத்தை       திறந்து     விட்டேன் 

சிறந்ததை       கொள்ள      வேண்டும்    தங்கமே ---நீ 

சிறப்பாக       வாழ    வேண்டும்      என்றுமே  

புதன், 31 ஆகஸ்ட், 2022

புண்ணான    நெஞ்சம்      பூவாக     மாறும் --நல்ல 

புதுமைகள்    தானே     எந்நாளும்    வாழும் 

பொன்னான   பொருளும்  புகழ்வந்து  சேரும்   --என் 

புருசோத்தமன்    அருளால்  எல்லாமும்    கிடைக்கும் 

எண்ணாமல்      நானும்      இருப்பேனோ    கண்ணா -என் 

இன்னலை     தீர்த்திட நீ      இசைவாயோ    மன்னா 

உன்னாலே     உலகில்    உயிர்    வாழ்கின்ரேன் --உன் 

உறவின்றி   எனக்கு      வேறு கதி எது     கண்ணா 

நிலவாக வந்து    நெஞ்சத்தில்     அமர்வாய் ---உன்னை 

நினைந்தவர்    தமக்கு     மனநிம்மதி     தருவாய் 

பலகாலம்       உனக்குப்     பணிவிடை     செய்வேன்  ---என் 

பரந்தாமன்     திருப்பாதம்    எனக்குப்    பரம சந்தோஷம்            829 

சனி, 27 ஆகஸ்ட், 2022

ஆதி நாயகன் ;  

ஆதிநாயகன்    அவனியை     ஆள்பவன் --நல் 

ஜோதி     வடிவினன்    சுந்தர    முகத்தோன் 

வேதியர்     தொழுதிடும்    விமலனின்  மயிந்தன்   --உலகில் 

நீதியைக்       காப்பவர்      நினைத்ததை     அருள்பவர்                827   

    


பாலசுப்ரமண்யர்   ;

சின்னவர்          சிறியவர்       என்றாலும் ---நம் 

சிவனாரின்   அருந்தவப்    புதல்வர்    அன்றோ 

கன்னல்       தமிழும்     அவர்     காலடி     தொழுதிடும் ---எண்ண 

இனியரை     உலகில்      எல்லோரும்     வணங்குவீர்                         828 

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

826- மாணிக்கம்

அறிவால்    உன்னை   அளந்தேன் -   உன்   

அழகால்     என்னையும்     கவர்ந்தாய் 

வருவாயென    நானும்    அழைத்தேன்  --என் 

வாழ்வே      நீயென      நினைத்தேன்     

நெஞ்சில்      கனலையும்     மூட்டினாய் --எனக்கு 

இதயத்தை      திறந்து    நீயும்     காட்டுவாய் 

கொஞ்சிட      வந்திடு        என் கோமளம் ---நீ 

கோடியில்      சிறந்த         மாணிக்கம் 

நிலவும்     எனக்கு       சுடுகிறது   --உன் 

நினைவோ    எனக்கு       இனிக்கிறது  --

வீசிடும்    காற்றும்     எரிகிறது --உன் 

வேல்விழி    என்னையும்   இழுக்கிறது 

என்குறை     உனக்கு     புரியாதோ ---நான் 

ஏங்குதல்    இன்னும்     தெரியாதோ 

பெண்மனம்     கொஞ்சமும்      மாறவில்லை  --இந்த 

பேதையின்    துயரமோ     தீரவில்லால் 

கண்கள்   நிறைந்திட     காட்சியுண்டு  --இந்த 

காதலி    கிடைத்தால்     மீட்சியுண்டு 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

காட்சி 8 2 5

கண்ணால்       வலையை     வீசி    ====நல்ல
காதல்       கதைகள்      பேசி
என்னை      வளைத்தாய்    மானே   ---இனி
நீதான்      எனக்கு    இனிக்கும்     தேனே

நிலவைப்      போல     குளிர்வாய்  ---என்
நெஞ்சம்        நிறைய      அமர்வாய்
பழக       பழமாய்       இனிப்பாய்    ---எனக்கு
பருவ        விருந்து      அளிப்பாய்

வாழுங்     காலம்       கோடி   ----நல்ல
வாழ்வு       வருமே     தேடி
சூழும்      துயரம்    ஏது   ----நம்
தோள்கள்      இணையும்    போது

கண்ணில்     இமையாய்     இருப்பேன்    ----உன்
கருணை      முகத்தை      ரசிப்பேன்
மண்ணில்     வந்த       வானம்    ----அடி
மங்கையே      இன்னுமா     நாணம்

கண்கள்        காணும்        காட்சி   ---அது
காலம்       முழுதும்          ஆட்சி
பெண்ணாய்     பிறந்த      தேவி    ---உன்னை
பிரிய      நினைத்தால்    நானே    பாபி
 

கண்ணே 8 2 4

கனியாத         காதல்       கைகூடுமா    ---இல்லை
கானல்          நீரான        கதையாகுமா
இனிதாக      மணவாழ்வு      உறவாகுமா     ----இல்லை
ஏக்கமே         வாழ்வினில்      வரவாகுமா

கணை விட்டுப்        பாயுதே       அம்பு     ---அடி
கண்ணாட்டி  உன்னோடு   எந்நாளும்    வம்பு
வீணாகப்        போகுதே       காலம்    ----இந்த
விவரம்      அறிந்தால்     வரும்  நல்லகாலம்

உறவுக்கு      கையேந்தி      நின்றேன்    ----உன்னை
உளமாற      தினம்    பூசை  செய்தேன்
பிரிவென்ற     வரம்தர      வேண்டாம்    ---இந்த
பித்தனை    எந்நாளும்     மறந்திட  வேண்டாம்

வாழ்ந்திடக்      கனவுகள்        கண்டேன்    ----உன்
வாலிபத்தை    வாரியள்ளி       உண்பேன்
சூழ்ந்திடும்       நிலையென்று    மாறும்     ----என்
சுந்தரி         அமைதி     உன்னாலே    சேரும்

உள்ளதை       வெளியில்     சொன்னேன்    ---உன்
உள்ளத்தில்    இடம் தேடி     வந்தேன்   
இல்லையென்      சொல்லாதே    பெண்னே    ----நான்
இருப்பது      உன்னாலே  அல்லவோ     அன்பே 



தெய்வம் 8 2 3

கண்ணில்     வைத்துக்      காத்திருந்தேன்    ----காதலை
நெஞ்சில்        பூசை       வைத்தேன்
பொன்னாய்     மதித்து    வாழ்ந்தேன்    ----உன்
பூவடியில்       தஞ்சம்       என்றேன்

மஞ்சம்        என்னையும்     அழைக்குது    ----உன்
மைவிழி       சுண்டி  சுண்டி    இழுக்குது
கொஞ்சம்     இரங்கிடக்      கூடாதா    ----நான்
கூவித்        தவிப்பது      புரியாதா

கருணை     மழைதனை       பொழியவிடு    ----இந்த
காதலன்        பக்கம்  திரும்பிவிடு
அருளை       வாரியே      வழங்கிவிடு   ----இந்த
அடிமையை      இனியாவது     வாழவிடு

நீயும்        நானும்        ஒன்றல்லவா   ---நம்
நினைவுகள்       எந்நாளும்       நன்றல்லவா
காயும்       நிலவைக்      கணக்கிலெடு    ----உன்
காதலன்       எனக்கினி      வாழ்வு கொடு

வானில்         எங்கும்      பறந்திடலாம்    ----இந்த
வையகம்       முழுதும்    திரிந்திடலாம்
தேனின்        சுவையென     வாழ்ந்திடலாம்    ----அந்த
தெய்வம்       அருளால்       சுகம் பெறலாம்