ஆதி நாயகன் ;
ஆதிநாயகன் அவனியை ஆள்பவன் --நல்
ஜோதி வடிவினன் சுந்தர முகத்தோன்
வேதியர் தொழுதிடும் விமலனின் மயிந்தன் --உலகில்
நீதியைக் காப்பவர் நினைத்ததை அருள்பவர் 827
பாலசுப்ரமண்யர் ;
சின்னவர் சிறியவர் என்றாலும் ---நம்
சிவனாரின் அருந்தவப் புதல்வர் அன்றோ
கன்னல் தமிழும் அவர் காலடி தொழுதிடும் ---எண்ண
இனியரை உலகில் எல்லோரும் வணங்குவீர் 828
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக