புதன், 31 ஆகஸ்ட், 2022

புண்ணான    நெஞ்சம்      பூவாக     மாறும் --நல்ல 

புதுமைகள்    தானே     எந்நாளும்    வாழும் 

பொன்னான   பொருளும்  புகழ்வந்து  சேரும்   --என் 

புருசோத்தமன்    அருளால்  எல்லாமும்    கிடைக்கும் 

எண்ணாமல்      நானும்      இருப்பேனோ    கண்ணா -என் 

இன்னலை     தீர்த்திட நீ      இசைவாயோ    மன்னா 

உன்னாலே     உலகில்    உயிர்    வாழ்கின்ரேன் --உன் 

உறவின்றி   எனக்கு      வேறு கதி எது     கண்ணா 

நிலவாக வந்து    நெஞ்சத்தில்     அமர்வாய் ---உன்னை 

நினைந்தவர்    தமக்கு     மனநிம்மதி     தருவாய் 

பலகாலம்       உனக்குப்     பணிவிடை     செய்வேன்  ---என் 

பரந்தாமன்     திருப்பாதம்    எனக்குப்    பரம சந்தோஷம்            829 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக