அறிவால் உன்னை அளந்தேன் - உன்
அழகால் என்னையும் கவர்ந்தாய்
வருவாயென நானும் அழைத்தேன் --என்
வாழ்வே நீயென நினைத்தேன்
நெஞ்சில் கனலையும் மூட்டினாய் --எனக்கு
இதயத்தை திறந்து நீயும் காட்டுவாய்
கொஞ்சிட வந்திடு என் கோமளம் ---நீ
கோடியில் சிறந்த மாணிக்கம்
நிலவும் எனக்கு சுடுகிறது --உன்
நினைவோ எனக்கு இனிக்கிறது --
வீசிடும் காற்றும் எரிகிறது --உன்
வேல்விழி என்னையும் இழுக்கிறது
என்குறை உனக்கு புரியாதோ ---நான்
ஏங்குதல் இன்னும் தெரியாதோ
பெண்மனம் கொஞ்சமும் மாறவில்லை --இந்த
பேதையின் துயரமோ தீரவில்லால்
கண்கள் நிறைந்திட காட்சியுண்டு --இந்த
காதலி கிடைத்தால் மீட்சியுண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக