ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ஜெயம் 628

உன்னோடு      நான்சேர      ---ஒரு
உன்னதம்         உருவாகும்
தேனோடு       பால்  சேர     ---மனதில்
தெவிட்டாத     சுகமாகும்

மடி மீதில்      தலை சாய்ந்தால்    ---பல
மயக்கங்கள்     வரவாகும்
கொடி மீதில்    கனிகளாட   ---நெஞ்சில்
கோடி இன்பம்      நிறைவாகும்

இரண்டுமே     ஒன்றானால் ---புது
இன்னிசை    வெளியாகும்
இதயங்கள்     நன்றானால்    ---வாழ்வில்
ஏற்றங்கள்      தெளிவாகும்

கண்ணோடு      கண் சேர  ---பல
கவிதைகள்     பிறப்பாகும்
மண்ணோடு     மழை  சேர்ந்தால்    ---உழவர்க்கு
மகிழ்ச்சியே      நிலையாகும்

எண்ணங்கள்      நல்லதானால்   ---உலகில்
எல்லாமே      நலமாகும்
ஏந்திழை      துணை  வந்தால்    ---இங்கு
எந்நாளும்      ஜெயமாகும் 

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

இள மான் 627

   இரவு பகல்       நாமும்     ---இங்கு
   இருந்தாக    வேண்டும்
எந்நாளும்     உனக்கு    ---நான்
விருந்தாக     வேண்டும்

மடியினில்     தலை  சாய்த்து  --கண்கள்
மலர்ந்திடச்    செய்வாயா
கொடியிடை    தடம்  பார்த்து    --எனக்கு
கொட்டித்     தருவாயா

காற்றின்     துணையோடு    --எந்தன்
காதலை      அறிவாயா
கன்னி      இளமானின்    ---நெஞ்சின்
கதவைத்      திறப்பாயா

இரண்டு       ஒன்றாக   ---எங்கும்
இளமை    வழிந்தோடும்
எண்ணப்    படகேறி    ---இருவரும்
எங்கேயும்   போகலாம்

கண்ணில்     மணியானாய்  --இரவில்
கனவுகளில்    துணையானாய்
உன்னை      மறப்பேனோ    ---மறந்தால்
உலகில்      நிலைப்பேனோ 

திங்கள், 14 ஜனவரி, 2019

பொங்கல் 626

பொங்கல்         பிறந்தது       பாருங்கடி      --நெஞ்சில் 
புதுமை          எண்ணங்கள்     சேருங்கடி 
திங்களை      தேவியைப்     போற்றுங்கடி    --இந்திய 
தேசம்       சிறப்புற      வாழ்த்துங்கடி 

வருடத்திற்கு        ஒருநாள்       பொங்கலடி     ---ஏழை 
வாழ்வினில்        வரும் நாள்    திருநாளடி 
உள்ளங்கள்     மகிழ்ந்திடப்     பொங்கலிடு    --அதில் 
உண்மையும்      நன்மையும்    பங்கிலிடு 

சட்டியில்       பொங்கல்      வைப்பதினால்    --எங்கும் 
சமத்துவம்     பொங்கி     நிறையுமடி 
கட்டிக்       கரும்பு       சுவைப்பதில்    --நம் 
கண்களில்     மகிழ்ச்சி      பொங்குமன்றோ 

குலவைப்     பாட்டுக்கள்     பாடுங்கடி    --இளம் 
குமரிகள்      சேர்ந்து       ஆடுங்கடி 
உழவர்      வாழ்வு      சிறக்கவென     --என்றும் 
உரத்த       குரலில்      முழங்குங்கடி 

கூடியே       சேர்ந்து       கும்மியடி    --ஏழை 
குடிசைக்கும்      பொங்கல்     சொந்தமடி 
வாடிய     பேருக்கும்     சோறு போடு   --நாடு 
வளமை     பெற்றிடப்     பாடுபடு 

ஏரினை     ஓட்டும்      உழவருக்கும்    --அவன் 
எருது        மாடு      கன்றினுக்கும் 
தேடிப்      பொங்கலை    அளியுங்கடி    ---நம்மை 
தெய்வம்      காத்திட     வேண்டுங்கடி 

வெள்ளி, 11 ஜனவரி, 2019

மாரியம்மா 625

கண்ணனூர்        மாரியம்மா    --எம்மை
காத்திட       வாருமம்மா
உன்னைஎண்ணிப்      பாடுகிறோம்    --நீ
ஓடிவந்து      காருமம்மா

வேப்பிலையின்    சாற்றினிலே     --என்றும்
வீற்றிருக்கும்     திருமகளே
காப்பதற்கு    உன்னையன்றி    --எங்கள்
கண்களுக்கு     தெரியவில்லை

மஞ்சளைக்    காப்பத்ற்கு    ---மண்ணில்
மாதரசி      நீ துணையல்லவோ
அஞ்சலென்ற    சொல்லினிலே    ---தாயே
அகிலமதைக்      காத்திடம்மா

கண்ணுக்கு      கண்ணாவாய்  ---ஏழை
கண்களுக்குப்    பொன்னாவாய்
பெண்குலம்    வாழ்வதற்கு      ---உலகில்
பேருதவி     செய்திடுவாய்

மாரியம்மா    மனசு வைத்தால்    ---எல்லா
மாதங்களும்      மழை பொழியும்
கோரிக்குரல்   கொடுத்து விட்டால்    ---வந்த
கொடுவினைகள்     தீர்ந்துவிடும் 

கண்ணபெருமானே 624

கண்ணில்      வரும்     காட்சியெல்லாம்  --இங்கே
எந்தன்          கண்ண     பெருமானே
கருணை    மழை     பொழிய   வேணும் --நித்தம்
எந்தன்         கண்ண     பெருமானே

உன்னிடத்தில்    ஆசை    வைத்தேன்   --நான்
எந்தன்      கண்ண     பெருமானே
உள்ள     மெல்லாம்   சிலிர்க்குதய்யா  --என்றும்
எந்தன்      கண்ண       பெருமானே

மின்னலெனத்     நீயும்    தோன்றுகிறாய்    --வானில்
எந்தன்       கண்ண     பெருமானே
மேனி    யெங்கும்     இன்பமய்யா -நலமே
எந்தன்     கண்ண    பெருமானே

நாவினில்    இனிப்பவன்        நீ    --நாளும்
எந்தன்    கண்ண      பெருமானே
நல்லவரைக்     காத்து    நிற்பாய்   -உலகில்
எந்தன்     கண்ண     பெருமானே

வளமையெலாம்     பொங்க    வேணும்     --வாழ்வில்
எந்தன்     கண்ண    பெருமானே
வானம்    மாரி     பெய்ய      வேணும்   --சுகமாய்
எந்தன்     கண்ண     பெருமானே

எங்கும்    இன்பம்       நிறைய   வேணும்   -நிறைவாய்
எந்தன்     கண்ண      பெருமானே
ஏழை சனம்    வாழ்வெனும்     --இனிதாய்
எந்தன்     கண்ண      பெருமானே 

தேன் 623

கண்களில்       மின்னலைக்      கண்டேன்    --அதனால்
கவிதைகள்       பாடிடக்      கற்றேன்
தென்றலில்      ஏறியே      பறப்பேன்      ---எந்தன்
தேவியே        உன்னைத்தான்     மணப்பேன்

என்னடி       செய்தாய்       மாயம்      ---எனக்கு
ஏனடி        மனதில்      காயம்
பொன்னென       நினைத்தேன்      உன்னை     ---நீயும்
புரிந்து      கொள்வாயோ      என்னை

வேரினில்      பழுத்திட்டப்        பலா     ---நீ
நேரில்      வருவது      உலா
கூறுவேன்       கவிதைகள்       கோடி    ---உன்னை
கொஞ்சவா      அனுதினம்       நாடி

நால்வகை     குணங்கள்       கொண்டு   ---நீ
நடந்து     வருவது    அழகினை   மொண்டு
சேலையில்      பூத்திட்ட     மலரே    ---உன்
சிறப்பினை      அறிந்தவர்    பலரே

உன்னைப்      பார்ப்பது      சுகமே    ---வரும்
உறவுகள்     என்றும்    ஜெயமே 
கண்களில்    கலக்கம்     ஏனடி       --நமது
காதல்       வாழ்வு      தேனடி