அமிழ்தினும் இனியவள் அன்னை --உலகில்
ஆளாக்கி விட்டாள் என்னை
கமழ்ந்திடும் மலரவள் வாசம் --அவள்
கண்களில் தெரிவது பாசம்
உயிரைப் பணயமாய் வைப்பாள் --தன்
உதிரமே பாலாய்க் கொடுப்பாள்
பயிர்களைப் போலவே வளர்ப்பாள் ==நல்ல
பழக்க வழக்கங்கள் சொல்வாள்
நன்றியை நினைத்திட வைப்பாள் --என்றும்
நயவஞ்சகம் சூதினை வெறுப்பாள்
அன்பினை சொல்லிக் கொடுப்பாள் --இங்கு
அனைவரும் ஒன்றென நினைப்பாள்
இரவும் பகலுமாய் உழைத்தாள் --என்னை
இமையென வாழ்வினில் காத்தாள்
உறவுக்கு அவள்தான் எல்லை --அவளை
உள்ளத்தில் மறப்பதும் இல்லை
அன்னையை நினைக்கையில் இன்பம் --என்றும்
அருகில் வராது துன்பம்
எண்ணி எண்ணியே ரசிப்பேன் --இனி
எந்நாளும் அவளையே துதிப்பேன்
ஆளாக்கி விட்டாள் என்னை
கமழ்ந்திடும் மலரவள் வாசம் --அவள்
கண்களில் தெரிவது பாசம்
உயிரைப் பணயமாய் வைப்பாள் --தன்
உதிரமே பாலாய்க் கொடுப்பாள்
பயிர்களைப் போலவே வளர்ப்பாள் ==நல்ல
பழக்க வழக்கங்கள் சொல்வாள்
நன்றியை நினைத்திட வைப்பாள் --என்றும்
நயவஞ்சகம் சூதினை வெறுப்பாள்
அன்பினை சொல்லிக் கொடுப்பாள் --இங்கு
அனைவரும் ஒன்றென நினைப்பாள்
இரவும் பகலுமாய் உழைத்தாள் --என்னை
இமையென வாழ்வினில் காத்தாள்
உறவுக்கு அவள்தான் எல்லை --அவளை
உள்ளத்தில் மறப்பதும் இல்லை
அன்னையை நினைக்கையில் இன்பம் --என்றும்
அருகில் வராது துன்பம்
எண்ணி எண்ணியே ரசிப்பேன் --இனி
எந்நாளும் அவளையே துதிப்பேன்