சொன்னாலும் புரிவது இல்லை --பின்
சுயமாய் தெரிவதும் இல்லை
மன்னாதி மன்னனாய் மமதையில் --அவர்
மகிழ்ந்து தினம் பேசிடுவார்
கண்ணாலே உடல் அளப்பா ர் --உடன்
கட்டிலுக்கு வலை விரிப்பார்
பெண்ணாகப் பிறந்த தெய்வம் ---வீணில்
பேதலித்து அலைய வைப்பார்
எந்நாளும் துயர் தருவார் --இங்கு
ஏழைக்கும் கொடுமை செய்வார்
மண்ணாசை கொண்டு தினம் --எனோ
மக்களை வதை புரிவார்
கோடானு கோடி யென்பார் --எளியோர்
குடிசைக்கும் தீயை வைப்பார்
கேடுகள் தேடி செல்வார் --பிறரைக்
கெடுத்திட வழிகள் சொல்வார்
வாழப் பிறந்த நம்மை --இவர்கள்
வாட்டுதல் என்ன முறை
ஆளவே பிறந்தவர் நாமென்ன --இன்றே
ஆர்த்தெழுதல் அன்றோ நல்ல நிறை
சுயமாய் தெரிவதும் இல்லை
மன்னாதி மன்னனாய் மமதையில் --அவர்
மகிழ்ந்து தினம் பேசிடுவார்
கண்ணாலே உடல் அளப்பா ர் --உடன்
கட்டிலுக்கு வலை விரிப்பார்
பெண்ணாகப் பிறந்த தெய்வம் ---வீணில்
பேதலித்து அலைய வைப்பார்
எந்நாளும் துயர் தருவார் --இங்கு
ஏழைக்கும் கொடுமை செய்வார்
மண்ணாசை கொண்டு தினம் --எனோ
மக்களை வதை புரிவார்
கோடானு கோடி யென்பார் --எளியோர்
குடிசைக்கும் தீயை வைப்பார்
கேடுகள் தேடி செல்வார் --பிறரைக்
கெடுத்திட வழிகள் சொல்வார்
வாழப் பிறந்த நம்மை --இவர்கள்
வாட்டுதல் என்ன முறை
ஆளவே பிறந்தவர் நாமென்ன --இன்றே
ஆர்த்தெழுதல் அன்றோ நல்ல நிறை