வானின் கருணை மழையாகும் -உழவர்
வாழ்வும் அதனால் வளமாகும்
தேனின் அருமை சுவையாகும் -நமக்கு
தெய்வம் என்பது பொதுவாகும்
மனிதர் யாவரும் ஒன்றாகும் -இதை
மதித்து நடப்பது நன்றாகும்
தனிமை என்பது சுமையாகும் -செய்யும்
தானம் ஒன்றே துணையாகும்
காதல் என்பது உணர்வாகும் -அதில்
கலந்து துடிப்பது நினைவாகும்
வேதம் என்பது விதியாகும் -இந்த
விவரம் அறிந்தால் தெளிவாகும்
கற்பு என்பது ம் பொதுவாகும் -இதை
கவனம் வைப்பதே நல்வழியாகும்
கற்பனை கலந்ததே கவியாகும் -நாம்
காண்பது ஒன்றே நிஜமாகும்
வந்தது எல்லாம் போய்விடுமே -இங்கு
வள்ளலின் பெருமையே நின்றிடுமே
அந்தமும் ஆதியும் அவனல்லவா -அதனை
அறிந்தவர் பெறுவது சுகமல்லவா
ஒன்றுக்குப் பின்னரே இரண்டுவரும் -நாம்
உழைத்திட செல்வங்கள் திரண்டு வரும்
நன்றி உள்ளதே நாயாகும் -இந்த
நியாயம் அறிவது நலமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக