சனி, 24 மே, 2014

நலம் 235.

வானின்  கருணை  மழையாகும் -உழவர் 
 வாழ்வும்  அதனால்  வளமாகும் 
 தேனின்  அருமை  சுவையாகும் -நமக்கு 
 தெய்வம்  என்பது  பொதுவாகும் 
 
 மனிதர்  யாவரும்  ஒன்றாகும் -இதை 
 மதித்து  நடப்பது  நன்றாகும் 
 தனிமை  என்பது  சுமையாகும் -செய்யும் 
 தானம்  ஒன்றே  துணையாகும் 
 
 காதல்  என்பது  உணர்வாகும் -அதில் 
 கலந்து  துடிப்பது  நினைவாகும் 
 வேதம்  என்பது  விதியாகும் -இந்த 
 விவரம்  அறிந்தால்  தெளிவாகும் 
 
 கற்பு  என்பது ம்  பொதுவாகும் -இதை 
 கவனம்  வைப்பதே  நல்வழியாகும் 
 கற்பனை  கலந்ததே  கவியாகும் -நாம் 
 காண்பது  ஒன்றே  நிஜமாகும் 
 
 வந்தது  எல்லாம்  போய்விடுமே -இங்கு 
 வள்ளலின்  பெருமையே  நின்றிடுமே 
 அந்தமும்  ஆதியும்  அவனல்லவா -அதனை 
 அறிந்தவர்  பெறுவது  சுகமல்லவா 
 
 ஒன்றுக்குப்  பின்னரே  இரண்டுவரும் -நாம் 
 உழைத்திட  செல்வங்கள்  திரண்டு வரும் 
 நன்றி  உள்ளதே  நாயாகும் -இந்த 
 நியாயம்  அறிவது  நலமாகும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக