உத்தமனே நல்லவனாய் வாழடா -உனை
வெல்லப் பூமியிலே யாரடா
சத்தியமே எப்போதும் வென்றிடும் -வெல்லும்
சக்தியினை உனக்கென்றும் தந்திடும்
கொள்ளைகளும் நாட்டிலே நடந்திடும் -பல
குடும்பங்களில் வறுமை சூழ்ந்திடும்
இல்லையெனும் நிலைமை வந்திடில் -உலகில்
எத்தனையோ குற்றங்களும் தீர்ந்திடும்
தன்னலமெனும் ஆசையினைத் தள்ளடா -நீ
தன்னாலே முடியுமெனக் கொள்ளடா
பொதுநலம் பெரிதெனவே நம்புவாய் -அந்தப்
பெருமையிலே உலகமதை வெல்லுவாய்
கற்றவர்கள் நிறையவேண்டும் நாட்டிலே -அதனால்
கண்ணியமாய் வாழ்வார்கள் வீட்டிலே
உற்றதுணை உனக்கு கல்வியே -இதனை
உலகோர்க்கு புரியவைப்பாய் சொல்லியே
மானத்தைக் காத்திடுவாய் மண்ணிலே -வந்த
மயக்கத்தை தெளியவைப்பாய் கண்ணிலே
தானத்தை பெரிதென வே சொல்லுவாய் -பெற்ற
தாய்தனைத் தெய்வமெனக் கொள்ளுவாய்
வெல்லப் பூமியிலே யாரடா
சத்தியமே எப்போதும் வென்றிடும் -வெல்லும்
சக்தியினை உனக்கென்றும் தந்திடும்
கொள்ளைகளும் நாட்டிலே நடந்திடும் -பல
குடும்பங்களில் வறுமை சூழ்ந்திடும்
இல்லையெனும் நிலைமை வந்திடில் -உலகில்
எத்தனையோ குற்றங்களும் தீர்ந்திடும்
தன்னலமெனும் ஆசையினைத் தள்ளடா -நீ
தன்னாலே முடியுமெனக் கொள்ளடா
பொதுநலம் பெரிதெனவே நம்புவாய் -அந்தப்
பெருமையிலே உலகமதை வெல்லுவாய்
கற்றவர்கள் நிறையவேண்டும் நாட்டிலே -அதனால்
கண்ணியமாய் வாழ்வார்கள் வீட்டிலே
உற்றதுணை உனக்கு கல்வியே -இதனை
உலகோர்க்கு புரியவைப்பாய் சொல்லியே
மானத்தைக் காத்திடுவாய் மண்ணிலே -வந்த
மயக்கத்தை தெளியவைப்பாய் கண்ணிலே
தானத்தை பெரிதென வே சொல்லுவாய் -பெற்ற
தாய்தனைத் தெய்வமெனக் கொள்ளுவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக