சனி, 24 மே, 2014

தெய்வம் 234.

உத்தமனே   நல்லவனாய்  வாழடா -உனை
 வெல்லப்  பூமியிலே  யாரடா
 சத்தியமே   எப்போதும்  வென்றிடும் -வெல்லும்
 சக்தியினை  உனக்கென்றும்  தந்திடும்

 கொள்ளைகளும்  நாட்டிலே  நடந்திடும் -பல
 குடும்பங்களில்  வறுமை  சூழ்ந்திடும்
 இல்லையெனும்  நிலைமை  வந்திடில் -உலகில்
 எத்தனையோ  குற்றங்களும்  தீர்ந்திடும்

 தன்னலமெனும்  ஆசையினைத்  தள்ளடா -நீ
 தன்னாலே  முடியுமெனக்  கொள்ளடா
 பொதுநலம்  பெரிதெனவே  நம்புவாய் -அந்தப்
 பெருமையிலே  உலகமதை  வெல்லுவாய்

 கற்றவர்கள்  நிறையவேண்டும்  நாட்டிலே -அதனால்
 கண்ணியமாய்  வாழ்வார்கள்  வீட்டிலே
 உற்றதுணை  உனக்கு  கல்வியே -இதனை
 உலகோர்க்கு  புரியவைப்பாய்  சொல்லியே

 மானத்தைக்  காத்திடுவாய்  மண்ணிலே -வந்த
 மயக்கத்தை  தெளியவைப்பாய்  கண்ணிலே
 தானத்தை   பெரிதென வே  சொல்லுவாய் -பெற்ற
 தாய்தனைத் தெய்வமெனக்  கொள்ளுவாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக