வியாழன், 15 மே, 2014

இன்பம் 233.

நிலவாய்   தெரிந்தாள் -அவள்
 நினைவில்   மகிழ்ந்தேன்
 கனவில்   இனித்தாள் -நான்
 களிப்பில்   மிதந்தேன்

 கண்ணால்   அழைத்தாள் -அதில்
 கவிதை   படித்தேன்
 பொன்னால்   செய்தான் -அவள்
 பூவாய்   மலர்ந்தாள்

 என்னால்  முடிந்தால் -அவளை
 இன்றே  மணப்பேன்
 முன்னால்  சென்றால் -எனது
 மோகம்   தொடரும்

 தனியாய்  இருந்தேன் -நீயே
 தாகம்   தணிப்பாய்
 கனியாய்   வந்தாய் -உனது
 காலடி   தொழுவேன்

 ஏக்கம்   தீர்த்திட -அன்பே
 இன்றேனும்   வருக
 என்னை   அணைத்தே -கொள்ளை
 இன்பம்   தருக

 என்னில்   நிறைந்தாள் -எனது
 இதயம்   நுழைந்தாள்
 கண்ணில்   வைப்பேன் -வாழும்
 காலம்   நினைப்பேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக