இறைவா என்ன சோதனை -ஏனோ
எனக்கு இந்த வேதனை
மறவாதிருந்த தால்வந்த பலனோ -இந்த
மண்ணில் பிறந்தத்திற்குப் பரிசோ
நாயாய் அலைந்தேன் ஐயா -நீ
நலம்பல தந்தீரே மெய்யாய்
நோயினி தீரல் எப்போ -நான்
நுன்புகழ் பாடுவேன் அப்போ
மனதினில் தீதுகள் இல்லை -உன்னை
மறந்தவர் பெறுவது தொல்லை
கணமுனைப் பிரியவும் மாட்டேன் -நினது
காலடி சரணம் சரணம்
எங்கே இருந்து வந்தேன் -இங்கு
எப்படி இந்நிலை பெற்றேன்
பொங்கும் கடலும் நீதான் -இதைப்
புரிந்தவர் உலகில் யார்தான்
நலம்பெற வேண்டும் நாளை -இனி
நன்றாய் வாழ்ந்திடத் தானே
குலப் புகழ் சிறந்திடக் காப்பாய் -உள்ளக்
குமுறலை இன்றேனும் கேட்பாய்
எனக்கு இந்த வேதனை
மறவாதிருந்த தால்வந்த பலனோ -இந்த
மண்ணில் பிறந்தத்திற்குப் பரிசோ
நாயாய் அலைந்தேன் ஐயா -நீ
நலம்பல தந்தீரே மெய்யாய்
நோயினி தீரல் எப்போ -நான்
நுன்புகழ் பாடுவேன் அப்போ
மனதினில் தீதுகள் இல்லை -உன்னை
மறந்தவர் பெறுவது தொல்லை
கணமுனைப் பிரியவும் மாட்டேன் -நினது
காலடி சரணம் சரணம்
எங்கே இருந்து வந்தேன் -இங்கு
எப்படி இந்நிலை பெற்றேன்
பொங்கும் கடலும் நீதான் -இதைப்
புரிந்தவர் உலகில் யார்தான்
நலம்பெற வேண்டும் நாளை -இனி
நன்றாய் வாழ்ந்திடத் தானே
குலப் புகழ் சிறந்திடக் காப்பாய் -உள்ளக்
குமுறலை இன்றேனும் கேட்பாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக