வியாழன், 15 மே, 2014

இறைவா 232.

இறைவா    என்ன  சோதனை  -ஏனோ
 எனக்கு  இந்த  வேதனை
 மறவாதிருந்த   தால்வந்த   பலனோ -இந்த
 மண்ணில் பிறந்தத்திற்குப்   பரிசோ

 நாயாய்   அலைந்தேன்  ஐயா -நீ
 நலம்பல  தந்தீரே  மெய்யாய்
 நோயினி  தீரல்  எப்போ -நான்
 நுன்புகழ்   பாடுவேன்  அப்போ

 மனதினில்  தீதுகள்  இல்லை -உன்னை
 மறந்தவர்  பெறுவது   தொல்லை
 கணமுனைப்  பிரியவும்  மாட்டேன் -நினது
 காலடி   சரணம்   சரணம்

 எங்கே  இருந்து   வந்தேன் -இங்கு
 எப்படி  இந்நிலை  பெற்றேன்
 பொங்கும்  கடலும்   நீதான் -இதைப்
 புரிந்தவர்   உலகில்   யார்தான்

 நலம்பெற  வேண்டும்   நாளை -இனி
 நன்றாய்  வாழ்ந்திடத்   தானே
 குலப் புகழ்   சிறந்திடக்   காப்பாய் -உள்ளக்
 குமுறலை   இன்றேனும்  கேட்பாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக