சனி, 24 மே, 2014

நலம் 235.

வானின்  கருணை  மழையாகும் -உழவர் 
 வாழ்வும்  அதனால்  வளமாகும் 
 தேனின்  அருமை  சுவையாகும் -நமக்கு 
 தெய்வம்  என்பது  பொதுவாகும் 
 
 மனிதர்  யாவரும்  ஒன்றாகும் -இதை 
 மதித்து  நடப்பது  நன்றாகும் 
 தனிமை  என்பது  சுமையாகும் -செய்யும் 
 தானம்  ஒன்றே  துணையாகும் 
 
 காதல்  என்பது  உணர்வாகும் -அதில் 
 கலந்து  துடிப்பது  நினைவாகும் 
 வேதம்  என்பது  விதியாகும் -இந்த 
 விவரம்  அறிந்தால்  தெளிவாகும் 
 
 கற்பு  என்பது ம்  பொதுவாகும் -இதை 
 கவனம்  வைப்பதே  நல்வழியாகும் 
 கற்பனை  கலந்ததே  கவியாகும் -நாம் 
 காண்பது  ஒன்றே  நிஜமாகும் 
 
 வந்தது  எல்லாம்  போய்விடுமே -இங்கு 
 வள்ளலின்  பெருமையே  நின்றிடுமே 
 அந்தமும்  ஆதியும்  அவனல்லவா -அதனை 
 அறிந்தவர்  பெறுவது  சுகமல்லவா 
 
 ஒன்றுக்குப்  பின்னரே  இரண்டுவரும் -நாம் 
 உழைத்திட  செல்வங்கள்  திரண்டு வரும் 
 நன்றி  உள்ளதே  நாயாகும் -இந்த 
 நியாயம்  அறிவது  நலமாகும்  

தெய்வம் 234.

உத்தமனே   நல்லவனாய்  வாழடா -உனை
 வெல்லப்  பூமியிலே  யாரடா
 சத்தியமே   எப்போதும்  வென்றிடும் -வெல்லும்
 சக்தியினை  உனக்கென்றும்  தந்திடும்

 கொள்ளைகளும்  நாட்டிலே  நடந்திடும் -பல
 குடும்பங்களில்  வறுமை  சூழ்ந்திடும்
 இல்லையெனும்  நிலைமை  வந்திடில் -உலகில்
 எத்தனையோ  குற்றங்களும்  தீர்ந்திடும்

 தன்னலமெனும்  ஆசையினைத்  தள்ளடா -நீ
 தன்னாலே  முடியுமெனக்  கொள்ளடா
 பொதுநலம்  பெரிதெனவே  நம்புவாய் -அந்தப்
 பெருமையிலே  உலகமதை  வெல்லுவாய்

 கற்றவர்கள்  நிறையவேண்டும்  நாட்டிலே -அதனால்
 கண்ணியமாய்  வாழ்வார்கள்  வீட்டிலே
 உற்றதுணை  உனக்கு  கல்வியே -இதனை
 உலகோர்க்கு  புரியவைப்பாய்  சொல்லியே

 மானத்தைக்  காத்திடுவாய்  மண்ணிலே -வந்த
 மயக்கத்தை  தெளியவைப்பாய்  கண்ணிலே
 தானத்தை   பெரிதென வே  சொல்லுவாய் -பெற்ற
 தாய்தனைத் தெய்வமெனக்  கொள்ளுவாய்

வியாழன், 15 மே, 2014

இன்பம் 233.

நிலவாய்   தெரிந்தாள் -அவள்
 நினைவில்   மகிழ்ந்தேன்
 கனவில்   இனித்தாள் -நான்
 களிப்பில்   மிதந்தேன்

 கண்ணால்   அழைத்தாள் -அதில்
 கவிதை   படித்தேன்
 பொன்னால்   செய்தான் -அவள்
 பூவாய்   மலர்ந்தாள்

 என்னால்  முடிந்தால் -அவளை
 இன்றே  மணப்பேன்
 முன்னால்  சென்றால் -எனது
 மோகம்   தொடரும்

 தனியாய்  இருந்தேன் -நீயே
 தாகம்   தணிப்பாய்
 கனியாய்   வந்தாய் -உனது
 காலடி   தொழுவேன்

 ஏக்கம்   தீர்த்திட -அன்பே
 இன்றேனும்   வருக
 என்னை   அணைத்தே -கொள்ளை
 இன்பம்   தருக

 என்னில்   நிறைந்தாள் -எனது
 இதயம்   நுழைந்தாள்
 கண்ணில்   வைப்பேன் -வாழும்
 காலம்   நினைப்பேன் 

இறைவா 232.

இறைவா    என்ன  சோதனை  -ஏனோ
 எனக்கு  இந்த  வேதனை
 மறவாதிருந்த   தால்வந்த   பலனோ -இந்த
 மண்ணில் பிறந்தத்திற்குப்   பரிசோ

 நாயாய்   அலைந்தேன்  ஐயா -நீ
 நலம்பல  தந்தீரே  மெய்யாய்
 நோயினி  தீரல்  எப்போ -நான்
 நுன்புகழ்   பாடுவேன்  அப்போ

 மனதினில்  தீதுகள்  இல்லை -உன்னை
 மறந்தவர்  பெறுவது   தொல்லை
 கணமுனைப்  பிரியவும்  மாட்டேன் -நினது
 காலடி   சரணம்   சரணம்

 எங்கே  இருந்து   வந்தேன் -இங்கு
 எப்படி  இந்நிலை  பெற்றேன்
 பொங்கும்  கடலும்   நீதான் -இதைப்
 புரிந்தவர்   உலகில்   யார்தான்

 நலம்பெற  வேண்டும்   நாளை -இனி
 நன்றாய்  வாழ்ந்திடத்   தானே
 குலப் புகழ்   சிறந்திடக்   காப்பாய் -உள்ளக்
 குமுறலை   இன்றேனும்  கேட்பாய் 

திருநாள் 231.

அனலாய்  இருந்தேன் -உன் 
 அழகால்  கவர்ந்தாய் 
 தனியாய்  கிடந்தேன் -நீயேன்  
 தழுவி   அணைத்தாய் 
 
 இரவால்  மெலிந்தேன் -உன்னையே 
 இரவல்   தந்தாய் 
 உறவால்  மகிழ்ந்தேன் -அதில் 
 உலகம்   மறந்தேன் 
 
 வரவால்  சுகமும் -எனது 
 வாழ்வில்  தினமும் 
 பெற்றேன்  அன்பே -இதனை 
 பெரிதும்  அறிவாய் 
 
ஊரார்   பேச -எனது 
 உற்றார்  ஏச 
 வேறார்   உண்டு -எனக்கு 
 விதியே  துணையா 
 
 நம்பி  இணைந்தேன் -நீயோ 
 நடப்பது  சரியா 
 வெம்பும்  என்மனம் -உனக்கு 
 விளம்பலும்  யாரோ 
 
 உடனே  வருக -எனது 
 உயிரைத்  தருக 
 திருநாள்  வாழ்வில் -இங்கே 
 திரும்ப   வருமா