புண்ணான நெஞ்சம் பூவாக மாறும் --நல்ல
புதுமைகள் தானே எந்நாளும் வாழும்
பொன்னான பொருளும் புகழ்வந்து சேரும் --என்
புருசோத்தமன் அருளால் எல்லாமும் கிடைக்கும்
எண்ணாமல் நானும் இருப்பேனோ கண்ணா -என்
இன்னலை தீர்த்திட நீ இசைவாயோ மன்னா
உன்னாலே உலகில் உயிர் வாழ்கின்ரேன் --உன்
உறவின்றி எனக்கு வேறு கதி எது கண்ணா
நிலவாக வந்து நெஞ்சத்தில் அமர்வாய் ---உன்னை
நினைந்தவர் தமக்கு மனநிம்மதி தருவாய்
பலகாலம் உனக்குப் பணிவிடை செய்வேன் ---என்
பரந்தாமன் திருப்பாதம் எனக்குப் பரம சந்தோஷம் 829