வெள்ளி, 30 நவம்பர், 2018

கனிமொழி 617

நெஞ்சில்      வருவது        ஒரு நினைவு     --உன்னை
நினைக்க     நினைக்க     பல கனவு
மஞ்சம்        அழைக்குது     மலர்விழி     --எந்தன்
மனதில்      உள்ளவ்ளநீ     கனிமொழி

தென்றலைத்     தூதென     அனுப்புகிறேன்     --என்னிடம்
திரும்பி       வந்திட     விரும்புகிறேன்
அன்றில்      பறவைகளாய்    ஆகலாம்   --நாம்
அவனி        முழுவதும்       ஆளலாம்

காற்றினில்       ஏறியே     வந்துவிடு   --உனது
காதலை         எனக்கே    தந்து விடு
போற்றிடும்      பாடல்     உனக்கல்லவா    --தினம்
புகழ்ந்திடும்     பெருமை    எனக்கல்லவா

இரவும்       பகலும்      ஒன்றாகும்   --நம்
இளமை     அங்கெ     விருந்தாகும்
உறவுக்குள்     உறவு    என்றாகும் --இதனை
உணர்ந்து    நடப்பது     நன்றாகும்

காலம்    முழுதும்     வாழ்ந்திருப்போம்   --உயர்
காதலை     என்றும்        வளர்த்திருப்போம்
கோல       முருகன்       துணையுமுண்டு    --என்
கோமளமே     வந்தால்  தான்    வாழ்வுமுண்டு

வியாழன், 22 நவம்பர், 2018

உதயநிலவு 616

நினைவில்    நிலையாய்    இருப்பவள்   --என்
நெஞ்சில்     துணையாய்    வசிப்பவள்
கனவினில்    தினமும்    கலப்பவள்    -அந்த
கன்னி     மயிலின்     பேரென்னவோ

முல்லை   மலராய்    சிரிப்பவன்   --காதல்
மோகத்தை   அள்ளிக்   கொடுப்பவள்
பள்ளி      சுகத்தை    தருபவள்    --அந்த
பைங்கிளி     என்பவள்   பேரென்னவோ

மீனைப் போல்      கண்கள்    கொண்டவள்   --பலரை
மின்சிடும்      அழகினைக்    கண்டவள்
தேனைப் போல்    இனிமை    ஆனவள்   --அன்பு
தேவதை    என்பவள்     பேரென்னவோ

நிழலினைப்    போலவே    தொடர்பவள்   --நெஞ்சம்
நிறைந்திட    என்மேல்     படர்பவள்
கழலினைக்   கால்களில்    அணிபவள்   --அற்புத
காரிகை     என்பவள்    பேரென்னவோ

கவிதைக்குப்    பொருளாய்    வருபவள்   --எனக்கு
காதலை   அள்ளியே    தருபவள் 
உதயநிலைவாய்     வானில்   ஒளிர்பவள்    --இந்த
உத்தமி      என்பவள்     பேரென்னவோ 

காதல் பரிசு 615

நின்னைத்      தேடி      அலைந்தேன்    --அந்த
நிலவைக்      கேட்டும்    பார்த்தேன்
என்னைத்     தேடியே     வாராய்    --நாம்
இருப்போம்     என்றுமே    ஜோராய்

பின்னல்      சடையில்      விழுந்தேன்    --உன்
பிரிவால்     உடலும்     மெலிந்தேன்
கன்னல்     தமிழும்     கசக்கும்    --எனக்கு
உனது        காதலே     இனிக்கும்

பட்டுப்      பாதங்கள்     வலிக்கும்   --இந்த
பதுமை     அங்கங்கள்     ஜொலிக்கும்
சிட்டுப்      போலவே     பறப்பாள்    --பலர்
ஜீவனைப்     பற்றியே     இழுப்பாள்

நினைத்தால்    இனித்திடும்     வயது   --யாரும்
நெருங்கத்    துடிக்கும்     மனது
குணத்தில்    அவளோ    தங்கம்    --அங்கெ
கொய்யா     கனிகளோ   மின்னும்

என்ன       சொல்லி       எழுத  --என்று
அவளிடம்    நானும்      பழக
கன்னி       என்னிடம்    வரலாம்    --அன்பு
காதல்     பரிசினைத்      தரலாம் 

ஞாயிறு, 11 நவம்பர், 2018

அழகன் 614

வருவாய்     முருகா     மயில்  மீதினிலே   --நல் 
வரமே       அருள்வாய்     இகவாழ்வினிலே 
குருவாய்     அமர்ந்தாய்   சுவாமிமலையில்   --திரு 
குமரா     மறவேன்      எனது    வாழவில் 

அலைசூழ்     செந்தூர்     அழகிய      வேலா     --ஏழை 
அகமே    நிறைவாய்      அன்பெனும்    பாலா 
கலைசூழ்     குகனே     கதிர்வேலன்    நீயே   --நினது 
கருணை    பொழிந்து      காத்திடு     உலகையே 

தமிலெனும்      மொழியில்      தலைமகன்       நீதான்   --உனது 
தாளடி      பணிந்தால்     சகலமும்      ஜெயம்தான் 
அமிழ்தினும்     இனித்திடும்     ஆறுமுக   பாலா    --தேம்பும் 
அடியவர்    நலம்பெற      அருளிடும்      சீலா 

பழத்தினால்    அன்று    பழனியில்     நின்றாய்    --சிவ
பழமாய்க்    கனிந்தே     பக்தரைக்    காப்பாய் 
களைத்திடும்    மாந்தர்     களித்திட    வைப்பாய்    --மண்ணில் 
காலம்     முழுதும்    கருணையில்    ஜொலிப்பாய் 

தமிழினில்      பாடி    தலைவனைப்      பணிவோம்   --அவன் 
தாளடி      தொழுது   இந்த    தரணியில்    உயர்வோம் 
அழகா     முருகா     எங்கள்    அருகினில்     வா     வா   --உன்னை 
அனுதினம்       தொழுவோம்      அன்பினைத்       தா    தா  

 

வியாழன், 1 நவம்பர், 2018

தீபாவளி 613

தீபங்கள்         வாழ்த்தும்        தீபாவளி    --உலகில்
தீமைகள்       மறையும்      தீபாவளி
மேகங்கள்     சூழ்ந்திடும்     தீபாவளி      --வானில்
மின்னல்      இடி மழை      தீபாவளி

நரகனை      அழித்த  நாள்     தீபாவளி    --நாட்டில்
நல்லறம்      செழிக்கும்     தீபாவளி
உறவுகள்    பேருக்கும்     தீபாவளி    --சிறுவர்
உள்ளத்தில்    மகிழ்ச்சி     தீபாவளி

இனிப்புகள்    பெறுவது     தீபாவளி    --உழைக்கும்
ஏழைக்கும்     உண்டு     தீபாவளி
நினைத்தால்     நிறைவது     தீபாவளி    --எங்கும்
நிம்மதி      மலர்வது     தீபாவளி

புத்தாடை     அணிவது     தீபாவளி    --மனதில்
பூரிப்பை      வளர்ப்பது    தீபாவளி
சத்தியம்    நிலைத்திடும்    தீபாவளி    --எங்கும்
சாந்தி        நிலவிடும்        தீபாவளி

செல்வங்கள்      பெருக்கிடும்     தீபாவளி    --மக்கள்
சிறப்புடன்       வாழ்ந்திடத்      தீபாவளி
உள்ளத்தில்    மகிழ்ச்சியே   தீபாவளி      --இந்த
உலகுக்கு     புதுமை     தீபாவளி