திங்கள், 24 பிப்ரவரி, 2014

வாக்கு -214

வாக்கு  என்பது  வலிமையே -அது
 வழங்குது  நமக்கு  உரிமையே


 அற்றை  நாளில் -நமை
 அரசர்கள்  ஆண்டனர்
 அன்பினை  விதைத்தனர் -பின்
 அறுவடை  செய்தனர்

 இற்றை  நாளினர் -நமக்கு
 என்ன  செய்தனர்
 இச்சகம்  பேசினார் -இங்கே
 இருப்போரை  ஏசினர்

 சூதும்  வாதும் -தமக்கு
 சுகமெனத்  தொடர்ந்திட
 யாதும்  எதுவும் -மண்ணில்
 எனதே  என்றனர்

 ஊரை  வளைத்தனர் -அதில்
 உள்ளதை  சுருட்டினர்
 பேரைக்  கெடுத்தனர் -அவரே
 பிழையாய்  வாழ்ந்தனர்

 நிம்மதி  நேர்மை -உலகில்
 நில்லாது  போயின
 அன்பெனும்  சொல்லே -ஏனோ
 அரிதாகி  மறைந்தது

 வானம்  பொய்த்தது -அதனால்
 வற்றின   நீர்வழி
 தேனெனும்  வளங்கள் -வீணில்
 தீயினில்  கருகின

 எங்கிலும்  கலவரம் -நமக்கு
 இதுதானே  நிலவரம்
 பொங்கின  கடல்கள் -புதிய
 பூமியைப்  படைக்க 

நாயகம் -213

நாணயம்  என்பது -நமக்கு
 நன்மையை  தருவது
 நல்லது  நாட்டவர்க்கே -அதனை
 நாடுக  தினம்  மனமே

 ஊனினை  உருக்கினால் -நீ
 உள்ளொளி  பெறலாம்
 உண்மையை   அறிந்திடலாம் -இதனை
 உலகிற்கும்  வழங்கிடலாம்

 உயர்வும்  தாழ்வும் -இங்கே
 இருப்பது  முறைதான்
 எத்தனை  பேரறிவார் -அதில்
 ஊக்கமிருக்க  உயர்வது  நிச்சயமே

 வானமதியும்  வளர்கதிர் ரவியும் -தினம்
 வருவது  மாறி  மாறியன்றோ
 தேனில் சுவையும்  தேளில் விஷமும் -அந்த
 தெய்வத்தின்  வேலையன்றோ

 உள்ளம்  விரிந்தால் -உனக்கு
 உலகம்  புரியும்
 உயர்வை  நினைந்தால் -புதிய
 ஊக்கம்  பிறக்கும்

 கள்ளம்  புகுந்தால் -பல
 கலகம்  விளையும்
 கயமை  எண்ணம் -மனதில்
 காற்றாய்  நுழையும்

 அலையும் மனதினை -என்றும்
 அடக்குதல்  செய்வாய்
 உலையின்  கொதிப்பினை-உன்
 உள்ளத்தில்  தணிப்பாய்

 வந்தார்  போவார் -நம்
 வாழ்வினில்  கோடி
 வளமாய்  இருப்பாய் -நல்ல
 வழியினைத்  தேடி

 இல்லையென்பது  இல்லாதொழிக -அதனால்
 எடுப்பாரென்பது  இயலாநிலையே
 சொல்லும்   செயலும் -இங்கு
 சுகம்  தர  வேண்டும்

 வல்லமை  வளர்க -உடன்
 வாய்மையைப்  பெறுக
 நல்லவை  நடக்க -அந்த
 நாயகம்  அருள்க

வெண்பனி -212

வெட்ட வெளியில்
 நெட்ட நெடுகில்
 கொட்டிக்  கிடக்குதே  பனி -அதை
 தொட்டால்  சுவைக்குமோ இனி  
 
வானத்  தாயவள்
 வாரி  வழங்கிய
 வண்ணப் புது மலரோ -இதை
 எண்ணித்  தெளிந்திடல்  அழகே

 அந்தர  வானில்
 பறந்து வரும்
 அனைவரும் ஒன்றென -நம்
 நிலை  உணர்த்தும்
   எங்கும் பரந்து
 இது  கிடக்கிறதே
 இறைவன்  செய்யும் விந்தையடா -நாம்
 இதனை  அறிந்திடல்  நன்மையடா
    மரமும் செடியும்
 இலை  உதிரும்
 மக்கள்  குளிரால் -தினம்
 குலை  நடுங்கும்

 வருவார்  போவாரின்றி
 வழக்கமினி  மாறுபடும்
 பெறுதல் எல்லாம்  வீட்டினிலே -அட
 பெய்யுது பனியோ  ரோட்டினிலே

 வெப்பம் எங்கோ  சென்றுவிட
 விழுவது  பனிமழை  தரையினிலே
 கப்பம்  கட்டிய பொருள்  போல -நாம்
 காலையில் பனிமுகம் கண்டிடலாம்

 ஒருநாள் பனியும்  ஓடிவிடும்
 உதிர்ந்த  இலையோ  துளிராகும்
 பருவக்  காலக் கூத்திதனை -அந்த
 பரம்பொருள்  அன்றோ   நடத்துகிறார்