திங்கள், 24 ஆகஸ்ட், 2020

காட்சி 8 2 5

கண்ணால்       வலையை     வீசி    ====நல்ல
காதல்       கதைகள்      பேசி
என்னை      வளைத்தாய்    மானே   ---இனி
நீதான்      எனக்கு    இனிக்கும்     தேனே

நிலவைப்      போல     குளிர்வாய்  ---என்
நெஞ்சம்        நிறைய      அமர்வாய்
பழக       பழமாய்       இனிப்பாய்    ---எனக்கு
பருவ        விருந்து      அளிப்பாய்

வாழுங்     காலம்       கோடி   ----நல்ல
வாழ்வு       வருமே     தேடி
சூழும்      துயரம்    ஏது   ----நம்
தோள்கள்      இணையும்    போது

கண்ணில்     இமையாய்     இருப்பேன்    ----உன்
கருணை      முகத்தை      ரசிப்பேன்
மண்ணில்     வந்த       வானம்    ----அடி
மங்கையே      இன்னுமா     நாணம்

கண்கள்        காணும்        காட்சி   ---அது
காலம்       முழுதும்          ஆட்சி
பெண்ணாய்     பிறந்த      தேவி    ---உன்னை
பிரிய      நினைத்தால்    நானே    பாபி
 

கண்ணே 8 2 4

கனியாத         காதல்       கைகூடுமா    ---இல்லை
கானல்          நீரான        கதையாகுமா
இனிதாக      மணவாழ்வு      உறவாகுமா     ----இல்லை
ஏக்கமே         வாழ்வினில்      வரவாகுமா

கணை விட்டுப்        பாயுதே       அம்பு     ---அடி
கண்ணாட்டி  உன்னோடு   எந்நாளும்    வம்பு
வீணாகப்        போகுதே       காலம்    ----இந்த
விவரம்      அறிந்தால்     வரும்  நல்லகாலம்

உறவுக்கு      கையேந்தி      நின்றேன்    ----உன்னை
உளமாற      தினம்    பூசை  செய்தேன்
பிரிவென்ற     வரம்தர      வேண்டாம்    ---இந்த
பித்தனை    எந்நாளும்     மறந்திட  வேண்டாம்

வாழ்ந்திடக்      கனவுகள்        கண்டேன்    ----உன்
வாலிபத்தை    வாரியள்ளி       உண்பேன்
சூழ்ந்திடும்       நிலையென்று    மாறும்     ----என்
சுந்தரி         அமைதி     உன்னாலே    சேரும்

உள்ளதை       வெளியில்     சொன்னேன்    ---உன்
உள்ளத்தில்    இடம் தேடி     வந்தேன்   
இல்லையென்      சொல்லாதே    பெண்னே    ----நான்
இருப்பது      உன்னாலே  அல்லவோ     அன்பே 



தெய்வம் 8 2 3

கண்ணில்     வைத்துக்      காத்திருந்தேன்    ----காதலை
நெஞ்சில்        பூசை       வைத்தேன்
பொன்னாய்     மதித்து    வாழ்ந்தேன்    ----உன்
பூவடியில்       தஞ்சம்       என்றேன்

மஞ்சம்        என்னையும்     அழைக்குது    ----உன்
மைவிழி       சுண்டி  சுண்டி    இழுக்குது
கொஞ்சம்     இரங்கிடக்      கூடாதா    ----நான்
கூவித்        தவிப்பது      புரியாதா

கருணை     மழைதனை       பொழியவிடு    ----இந்த
காதலன்        பக்கம்  திரும்பிவிடு
அருளை       வாரியே      வழங்கிவிடு   ----இந்த
அடிமையை      இனியாவது     வாழவிடு

நீயும்        நானும்        ஒன்றல்லவா   ---நம்
நினைவுகள்       எந்நாளும்       நன்றல்லவா
காயும்       நிலவைக்      கணக்கிலெடு    ----உன்
காதலன்       எனக்கினி      வாழ்வு கொடு

வானில்         எங்கும்      பறந்திடலாம்    ----இந்த
வையகம்       முழுதும்    திரிந்திடலாம்
தேனின்        சுவையென     வாழ்ந்திடலாம்    ----அந்த
தெய்வம்       அருளால்       சுகம் பெறலாம் 

கீதங்கள் 822

கண்ணில்     வந்தாய்    கண்மணி   ---உன்
கனிஇதழ்       என்றும்     மாங்கனி
என்னில்   மலர்ந்த     பூங்கொடி  ---நான்
என்றும்     உந்தன்     கைப்பிடி

பொன்னில்    விளைந்த      பூவையே   ---உன்
பூவுடல்        எனக்கு       தேவையே
கண்கள்      சொல்வது      காவியம்    ---நீ
கம்பன்        வரைந்த        ஓவியம்

நின்றால்       நடந்தால்      நிலவடி    ----நான்
நித்தம்       தொழுவேன்     திருவடி
ஒன்றாய்       சேர்ந்திடக்     கூடுமோ    ----உன்
மனம்       அதனை யும்       நாடுமோ

இரவு     முழுவதும்       ஏக்கம்      ----அடியே
எங்கேயோ      போனது      தூக்கம்
உறவு       என்பதில்     நாட்டம்   ---நீ
உதறினால்     எடுப்பேன்      ஓட்டம்

வாட்டம்      போக்கிட      வந்திடு    ----உனது
வற்றாத        அன்பினை     தந்திடு
தோட்டம்      துறவினில்      ஆடலாம்    ----நாம்
சுகமாய்       கானம்       பாடலாம்