கண்ணால் வலையை வீசி ====நல்ல
காதல் கதைகள் பேசி
என்னை வளைத்தாய் மானே ---இனி
நீதான் எனக்கு இனிக்கும் தேனே
நிலவைப் போல குளிர்வாய் ---என்
நெஞ்சம் நிறைய அமர்வாய்
பழக பழமாய் இனிப்பாய் ---எனக்கு
பருவ விருந்து அளிப்பாய்
வாழுங் காலம் கோடி ----நல்ல
வாழ்வு வருமே தேடி
சூழும் துயரம் ஏது ----நம்
தோள்கள் இணையும் போது
கண்ணில் இமையாய் இருப்பேன் ----உன்
கருணை முகத்தை ரசிப்பேன்
மண்ணில் வந்த வானம் ----அடி
மங்கையே இன்னுமா நாணம்
கண்கள் காணும் காட்சி ---அது
காலம் முழுதும் ஆட்சி
பெண்ணாய் பிறந்த தேவி ---உன்னை
பிரிய நினைத்தால் நானே பாபி
காதல் கதைகள் பேசி
என்னை வளைத்தாய் மானே ---இனி
நீதான் எனக்கு இனிக்கும் தேனே
நிலவைப் போல குளிர்வாய் ---என்
நெஞ்சம் நிறைய அமர்வாய்
பழக பழமாய் இனிப்பாய் ---எனக்கு
பருவ விருந்து அளிப்பாய்
வாழுங் காலம் கோடி ----நல்ல
வாழ்வு வருமே தேடி
சூழும் துயரம் ஏது ----நம்
தோள்கள் இணையும் போது
கண்ணில் இமையாய் இருப்பேன் ----உன்
கருணை முகத்தை ரசிப்பேன்
மண்ணில் வந்த வானம் ----அடி
மங்கையே இன்னுமா நாணம்
கண்கள் காணும் காட்சி ---அது
காலம் முழுதும் ஆட்சி
பெண்ணாய் பிறந்த தேவி ---உன்னை
பிரிய நினைத்தால் நானே பாபி