சனி, 28 மார்ச், 2020

விடிவெள்ளி 8 2 0

காலையில்       சீக்கிரம்       எழுவாய்    ---உள்ள 
கடமையை      விரைவில்     முடிப்பாய் 
வேளைக்குப்    பள்ளி       செல்வாய்    ----அங்கு 
விவரம்       தெரிந்து       கொள்வாய் 

மாலையில்       இல்லம்      வருவாய்   ---மற்றவரோடு 
இருந்திடு        நீயும்       இயல்பாய் 
சோலையில்     சுற்றி      மகிழ்வாய்    ----அங்கு 
சுத்தமான      காற்றினை     உணர்வாய் 

அன்னை       தந்தையை      மதிப்பாய்    ----அவர் 
அறிவுரைப்படியே  தினமும்     நடப்பாய் 
எண்ணத்தில்    நல்லதை      நினைப்பாய்  ---என்றும் 
இதயத்தில்      நன்றியை     சுமப்பாய் 

தேசம்       செழிப்புற        உழைப்பாய்   ----நீ 
தேடிய      செல்வத்தை      பகிர்வாய் 
மோச       எண்ணத்தை      துறப்பாய்    ---வீண் 
மோக     மென்பதை      தவிர்ப்பாய்    

நாட்டிற்கு        நன்றியாய்       இருப்பாய்   ----என்றும் 
நயவஞ்சகர்க்கு      எதிரியாய்     திகழ்வாய் 
வீட்டிற்கு         பிள்ளையாய்      ஒளிர்வாய்   ---நீ 
விடிவெள்ளியாய்      உலகினில்       நிலைப்பாய் 

சரம் 819

அழகாக         வந்தாய்     ----என்னை 
அறிவாலே      வென்றாய் 
பழகாமல்        சென்றாய்     ---தமிழ் 
பாவை        நீ  யாரோ 

சிலை போல      நின்றேன்     ---உன் 
சிற்றிடை     கண்டேன் 
கலையாத     நிலவோ    ---நீ 
காமன்      விடும்   சரமோ 

உளமாற       நினைத்தேன்   ---என் 
உறவாக்கத்    துடித்தேன் 
விழிவாசல்      திறப்பாய்    ---என்னை 
விரும்பி  நீ      அணைப்பாய் 

நாலடி        நடந்தால்    ---புது 
நாடகம்       நடக்கும் 
சேலடி       பட்டால்    ---என் 
சிந்தையும்      மயஙகும் 

வரம்  வேண்டி       வந்தேன்   ---இனிய 
வாழ்வையே      தருவாய் 
கரம்  பற்ற      வேண்டும்    ----உந்தன் 
காலடி        தொடர்வேன்