சனி, 18 ஜனவரி, 2020

பொங்கல் 816

                                         பல்லவி 
பொங்கல்          பிறந்தது            பாருங்கடி    ----இளம் 
பூவையர்           யாவரும்           வாருங்கடி 
                                  அனுபல்லவி 
திங்களை          தேவியைக்       கும்பிடுவோம்    -----இந்த 
தேசம்          செழித்திட         உழைத்திடுவோம் 
                               சரணங்கள் 
எங்கும்           பசுமை         நீரோட்டம்   ----இங்கு 
எத்துணை      மனிதர்       பெருங்கூட்டம் 
புத்தர்           பிறந்ததும்        நம்நாட்டில்    ---அவர் 
போதனை       செழித்தது      அயல்நாட்டில் 

இல்லையென்பதை       மாற்றி         வைப்போம்     ---நமது 
இந்திய        நாட்டை     உயரவைப்போம் 
எல்லையில்        தோன்றும்     பகைவர்களை    ----நமது 
இரும்புக்           கரத்தால்         முறியடிப்போம் 

மதங்களின்        பெயரால்       எதற்கு         சண்டை   ----இந்த 
மண்ணில்        அனைவரும்       ஒன்றேயன்றோ 
எதற்கும்         துணிந்து       நடைபோடு     -----நாம் 
இந்தியர்         என்கின்ற       நினைவோடு 

(தையில்     வருகின்ற      பொங்கலை       வரவேற்கும்      பாடல் )

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மிருகம் 8 1 5

சொல்லாமல்          இருக்க        முடியல்லே   ----உலகம்
சொன்னதும்       திருந்துமோ      தெரியல்லே
வெள்ளையைப்      பாலெனச்     சொல்லுறான்    ---வீணே
வெட்டியாய்க்        காலத்தை       மெல்லுறான்

உள்ளதை        பொய்யென      மாத்துறான்    ---இங்கே
உழைக்காமல்       காசினைத்      தேத்துறான்
கள்ளமே        வாழ்வெனக்       கொள்ளுறான்     ---என்றும்
கயவனாய்      உலகினில்       வாழ்கிறான்

பெண்களை       கேலியாய்ப்       பேசுறான்   ---அவர்
பின்னாலே       வலைதனை       வீசுறான்
அன்பில்லா        மிருகமாய்      அலைகிறான்    ----காலம்
அடித்திடும்        வேளையில்      அழுகிறான்

வள்ளலாய்       வேஷங்கள்       போடுறான்    ----ஏழை
வறுமையில்       இன்பத்தை     தேடுறான்
கொள்ளைகள்      அடித்துக்       குவிக்கிறான்    ----அவை
கொள்ளை      போனபின்          துடிக்கிறான்

உத்தமன்         போலவே         தெரிகிறான்    ----இந்த
உலகத்தையே      வளைத்திடத்       துடிக்கிறான்
சத்திய       நெறிவழி       மறக்கிறான்     -----தன்னையே
சாஸ்வதமாய்         எண்ணிக்         கொள்கிறான்