திங்கள், 25 பிப்ரவரி, 2019

கண்ணா 631

கண்ணா      உந்தனை      நினைவேன்    ---வரும்
கவலைகள்     அனைத்தையும்      மறப்பேன்
எண்ணாமல்      வாழ்வது      இல்லை     ---நான்
உன்னினையடி     தொழுதிடும்     பிள்ளை

கங்கைக்      கரைதனில்      தோட்டம்      ---அங்கு
காதல்      மழையினில்     ஆட்டம்
எங்கிலும்     இளமை     வழியும்   ---இருக்கிற
பொழுதும்     தேனாய்க்    கழியும்

பாஞ்சாலிக்கு     சேலையைக்      கொடுத்தாய்   ---அந்த
பார்த்தனுக்கு    வெற்றியை     யளித்தாய்
அஞ்சேல்    எனும்சொல்      உரைத்தாய்     ---உன்னை
அனுதினம்      பாடிட     எந்தனைப்      படைத்தாய்

எத்தனைப்      பிறவிகள்     எடுப்பேனோ    ---அதில்
இறைவனே     உந்தனை    மறப்பேனோ
சத்தியம்      நிலைத்திட     வந்தவரே     ---எனக்கு
சகலமும்     கற்றிட த்     தந்தவரே

கண்ணன்      என்றிடக்      கவலை இல்லை    ---அவன்
காலடி       வீழ்ந்தவர்      தோற்பதில்லை
மண்ணிலே    மாயங்கள்     செய்பவனாம்   ---நம்
மனங்களில்     மாதவன்     வாழ்பவனாம் 

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

காதல் 630

உலகம்      முழுதும்      நிறைவதென்ன     ---நம்
உள்ளம்    என்றும்      அலைவதென்ன
கலகம்      வருகின்ற     காலமென்ன   ---மனம்
களிப்பினில்    மூழ்கிடும்     வேகமென்ன
      காதல்          காதல்         காதல்
இரவும்      பகலும்      வளர்வதென்ன     ---அந்த
இயற்கை      வளர்க்கும்      ஜாலமென்ன
உறவை     பெருக்கும்     உண்மையென்ன   ---தினம்
உழன்றுத்     தவிக்கும்     கோலமென்ன
    காதல்       காதல்        காதல்
ஆசைகள்     அதிகம்       வளர்வதென்ன    ---கனவில்
அன்பரைக்    கண்டு     மகிழ்வதென்ன
ஏழை யின்     நெஞ்சிலும்     நுழைவதென்ன   ---வரும்
இளமையே     துன்பமாய்     தெரிவதென்ன
    காதல்       காதல்       காதல்
உயிரில்     துடிக்கும்      ஓசையென்ன     ---இங்கு
உண்மையே      பொய்யாய்     போவதென்ன
மனதில்       பொங்கும்    மகிழ்ச்சியென்ன    ---நாளும்
மலர்ந்து     வழிந்திடும்     கிளர்ச்சியென்ன
     காதல்        காதல்        காதல்
எடுக்க       வளரும்      இன்பமென்ன ---எனோ
இணைய      மறுத்திடும்    துன்பமென்ன
படிக்க       இனித்திடும்      பாடமென்ன    ---நேரில்
பார்த்து     ரசித்திடும்       பருவமென்ன
    காதல்       காதல்       காதல்
(உலகெங்கிலும்  கொண்டாடப்பெறும்    காதலர்தினத்திற்காக 
இந்தப்பாடல்      எழுதப்பட்டது    14-02-2019 )

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

செல்வி 629

என்ன      நினைத்து      அழுகிறேன்     --அட
என்னையே    நினைத்து     அழுகிறேன்
கண்ணில்      கருணை     வரவில்லையோ    --எனது
கவலைகள்      உனக்கும்     புரியலையா

இரவு         பகலாய்        நினைத்தேனே    --உன்னை
என்னிதயத்தில்        காவலாய்      வைத்தேனே
உதவிடும்        மனமும்      உனக்கில்லையோ   --நான்
உழன்று        தவிப்பதும்      சரிதானோ

தந்தை       சொன்ன      வழி  நடந்தேன்    ---உன்
தாளடி     தொழுது       மகிழ்ந்தவன்  நான்
சிந்தை      கலங்குதல்     விதிதானோ     ---எங்கள்
செல்வியே      உனக்கும்      முறைதானா

மக்கள்       செல்வங்கள்      நீ கொடுத்தாய்     ---அவர்கள்
மகிழ்வாய்       வாழவரம்      கொடுத்தாய்
சிக்கல்கள்       தீர்த்திட      வருவாயா      ---எனக்கு
செல்வங்களை     அள்ளித்     தருவாயா

கண்ணீர்      வழிவதைத்      துடைப்பாயா    ---என்னை
க்ளிப்பினில்      இனிமேல்     வைப்பாயா
பெண்ணில்     பெரும்பொருள்     நீயல்லவா     ---உன்
பிள்ளை      என்பவன்       நானல்லவா

நீரும்        நிலமும்      உள்ளவரை    ---என்றும்
நீதியே       உலகில்     வெல்லும்வரை
பேரும்      புகழும்      பெறவேண்டும்     ---நீதான்
பெரும்துணையாய்    என்னுடன்    வரவேண்டும்