
அழகோடு விளையாடும் எழில் ஓவியம்-உன்
அசைவெல்லாம் உருவாக்கும் ஒரு காவியம்
என்னை நாடி வருகின்ற புது வெள்ளமே -இனி
எந்நாளும் இன்பத்தில் என்னுள்ளமே
புது மாலை தனை சூடி சுகம் காணுவோம் -அன்பு
பொங்கிடும் தேனாற்றில் நீராடுவோம்
துணை தேடி வருகின்ற எழில் தேவனே -உன்னை
தொட்டாலே சுகம் கோடி உருவாகுமே
மலருக்குள் மனம் போல ஒன்ராகினோம் -அந்த
மயக்கத்தில் இந்நேரம் பண் பாடினோம்
நிலவுக்குள் ஒளியாக நின்ராடுவோம் -காதல்
நினைவுக்குள் புது வாழ்வு நாம் தேடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக