புதன், 22 ஜூலை, 2009

கேள்வி


எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன் -இந்த
எண்ணத்தைகுரலில் பாடுகிறேன்
உனக்கு எதுவும் தெரியாதா -நான்
உன்னால் தவிப்பது புரியாதா

இரவும் பகலும் உன் நினைவு -கண்
இமைகள் தேடிட வரும் கனவு
சிரிக்கும் செயலை நான் மறந்தேன் -உனை
சிரசினில் வைத்து தினம் சுமந்தேன்
காயும் நிலவு வீனானதடி -பெரும்
கடலில் பெய்த மழை போலானதடி
போயும் போயும் உனை நினைத்தேன் -ஒரு
புகலிடம் தேடி கனவு கண்டேன்

கனவு கைவரும் நாள் இல்லையோ -என்
கவிதை வரிகளும் உன் நினைவில்லையோ
இனியும் பொறுத்திட முடியாது -நாம்
இன்றே மகிழ்ந்திட வழி கூறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக