செவ்வாய், 28 ஜூலை, 2009

புது வாழ்வு


அழகோடு விளையாடும் எழில் ஓவியம்-உன்
அசைவெல்லாம் உருவாக்கும் ஒரு காவியம்
என்னை நாடி வருகின்ற புது வெள்ளமே -இனி
எந்நாளும் இன்பத்தில் என்னுள்ளமே

புது மாலை தனை சூடி சுகம் காணுவோம் -அன்பு
பொங்கிடும் தேனாற்றில் நீராடுவோம்
துணை தேடி வருகின்ற எழில் தேவனே -உன்னை
தொட்டாலே சுகம் கோடி உருவாகுமே

மலருக்குள் மனம் போல ஒன்ராகினோம் -அந்த
மயக்கத்தில் இந்நேரம் பண் பாடினோம்
நிலவுக்குள் ஒளியாக நின்ராடுவோம் -காதல்
நினைவுக்குள் புது வாழ்வு நாம் தேடுவோம்

புதன், 22 ஜூலை, 2009

கேள்வி


எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன் -இந்த
எண்ணத்தைகுரலில் பாடுகிறேன்
உனக்கு எதுவும் தெரியாதா -நான்
உன்னால் தவிப்பது புரியாதா

இரவும் பகலும் உன் நினைவு -கண்
இமைகள் தேடிட வரும் கனவு
சிரிக்கும் செயலை நான் மறந்தேன் -உனை
சிரசினில் வைத்து தினம் சுமந்தேன்
காயும் நிலவு வீனானதடி -பெரும்
கடலில் பெய்த மழை போலானதடி
போயும் போயும் உனை நினைத்தேன் -ஒரு
புகலிடம் தேடி கனவு கண்டேன்

கனவு கைவரும் நாள் இல்லையோ -என்
கவிதை வரிகளும் உன் நினைவில்லையோ
இனியும் பொறுத்திட முடியாது -நாம்
இன்றே மகிழ்ந்திட வழி கூறு