அழகோடு விளையாடும் எழில் ஓவியம்-உன்அசைவெல்லாம் உருவாக்கும் ஒரு காவியம்என்னை நாடி வருகின்ற புது வெள்ளமே -இனிஎந்நாளும் இன்பத்தில் என்னுள்ளமேபுது மாலை தனை சூடி சுகம் காணுவோம் -அன்புபொங்கிடும் தேனாற்றில் நீராடுவோம்துணை தேடி வருகின்ற எழில் தேவனே -உன்னைதொட்டாலே சுகம் கோடி உருவாகுமேமலருக்குள் மனம் போல ஒன்ராகினோம் -அந்தமயக்கத்தில் இந்நேரம் பண் பாடினோம்நிலவுக்குள் ஒளியாக நின்ராடுவோம் -காதல்நினைவுக்குள் புது வாழ்வு நாம் தேடுவோம்
எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன் -இந்தஎண்ணத்தைகுரலில் பாடுகிறேன்உனக்கு எதுவும் தெரியாதா -நான்உன்னால் தவிப்பது புரியாதா இரவும் பகலும் உன் நினைவு -கண்இமைகள் தேடிட வரும் கனவுசிரிக்கும் செயலை நான் மறந்தேன் -உனைசிரசினில் வைத்து தினம் சுமந்தேன்காயும் நிலவு வீனானதடி -பெரும்கடலில் பெய்த மழை போலானதடிபோயும் போயும் உனை நினைத்தேன் -ஒருபுகலிடம் தேடி கனவு கண்டேன் கனவு கைவரும் நாள் இல்லையோ -என்கவிதை வரிகளும் உன் நினைவில்லையோஇனியும் பொறுத்திட முடியாது -நாம்இன்றே மகிழ்ந்திட வழி கூறு