வெள்ளி, 1 மே, 2020

பலா 8 2 1

நிலவால்          முகம்         மறைத்தாய்   ----உன்
நினைவால்      என்னை     வளர்த்தாய்
பழகத்          தமிழாய்      இனித்தாய்    ---உன்
பருவத்தால்         என்னை     வளைத்தாய்

கண்கள்       உறங்க         வில்லை     ----அடி
காதலே        பெருந்       தொல்லை
பெண்கள்        படைத்   தலைவி   -----நீ
பேசப்  பேசப்    கொட்டும்     அருவி

சிரித்து       என்னை      சிறைபிடித்தாய்    ---என்
ஜீவன்          பறி      போகுதடி
பழுத்த      பலாச்      சுளையே    ----நீ
பக்கம்      இருக்க     ஏது   கவலையே

நினைக்க       நினைக்க       இனிக்குமடி    ----உன்
நீண்ட        விழிகள்       அழைக்குமடி
அணைக்க     நெஞ்சம்     துடிக்குமடி   ----என்
அருகில் வர      என்ன      வெட்கமடி

ஆசை        அடங்க      வில்லை   ----என்
அன்பில்     எந்தக்     குறையுமில்லை
பூசை       செய்திடும்    பக்தனடி   ---உனது
புன்னகை     ஒன்றே      போதுமடி