இனிதாக கவி பாட உன்னை வேண்டினேன்
கனி போன்ற தமிழோடு தினம் பாடினேன்
தணியாத நினைவோடு நான் வெம்பினேன்
தடுத்தாள வருவாயென ஏன் நம்பினேன்
அலை போன்ற கருங்கூந்தல் அபிராமியே
அழகெல்லாம் சொல்லுமே வுனது அருளாசியே
கலையான வுன் திருமேனி கண்காட்சியே
நிலை யான புது வாழ்வு தினம் சாட்சியே
கண நாதர் பெயர் பெற்ற கலை தெய்வமே
கண் பட்டால் பெருகும் நல்புது யோகமே
வினை தீர்க்க வரு மெங்கள்விநாயகரே
துணை நிற்க்க பயமேது நிதம் சொர்க்கமே
கனிக்காக மனம் நொந்த கதிர் வேலா
தனியாக மலையேறி அன்று தவமாகினாய்
இனிக்கின்ற தமிழிற்கு இறைவன் நீயே
இனியேனும் விரைவாக எனை காக்க வா